சிங்கப்பூர் தடை: ரஷ்யத் தூதர் குறைகூறினார்

சிங்கப்பூர் தடை: ரஷ்யத் தூதர் குறைகூறினார்

2 mins read
ab3eb92f-c2bc-4565-8ebb-4408ec6b6c7e
சிங்கப்பூருக்கான ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்டுள்ள நிகோலே குடேேஷவ். படம்: ரஷ்ய தூதரகம்/ ஃபேஸ்புக் -

உக்­ரேன் மீது படை எடுத்­த­தற்­காக ரஷ்­யா­வுக்கு எதி­ராக மேற்கு நாடு­க­ளு­டன் சேர்ந்து தடை விதிக்க சிங்­கப்­பூ­ரும் முடிவு செய்து இருப்­பதை சிங்­கப்­பூருக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடேேஷவ் குறை­கூ­றி­னார்.

சிங்­கப்­பூ­ரின் முடிவு தவறா னது; அது இருதரப்பு உறவு மேம்­பாட்­டுக்கு எதி­ரா­னது; வட்­டார ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­தும் முயற்­சி­க­ளுக்­கும் அது எதி­ரா­னது என்று தாங்­கள் நம்­பு­வ­தாக சவுத் சைனா மார்­னிங் போஸ்ட் செய்­தித்­தா­ளுக்கு அளித்த ஒரு பேட்டி யில் திரு குடேேஷவ் தெரி­வித்தார்.

ரஷ்­யா­வுக்கு எதி­ராக தடை விதித்­துள்ள ஒரே ஒரு தென் கிழக்கு ஆசிய நாடு சிங்­கப்­பூர்­தான் என்­ப­தைச் சுட்­டிய அவர், இந்த வட்­டா­ரப் பிரச்சி­னை­களில் ஒரு­மித்த கவனத்­தைச் செலுத்து­வது விவே­க­மிக்­க­தாக இருந்­திருக்­கும் என்றார்.

ஆசி­யா­வில் இருந்து தொலை வில் இருக்­கும் ஒரு பகு­தி­யின் பிரச்­சி­னை­களில் கவ­னம் செலுத்­து­வ­தை­விட இந்த வட்­டா­ரத்­திற்­கான அடிப்­படை முக்­கி­யத்­துவமிக்க விவ­கா­ரங்­க­ளில் கவனம் செலுத்­து­வதே தங்­கள் விருப்­ப­மாக இருக்­கும் என்று அவர் தெரி­வித்­தார்.

நாட்­டின் இறை­யாண்­மையை, அர­சி­யல் சுதந்­தி­ரத்தை உறு­திப்­படுத்­தும் கோட்­பா­டு­க­ளுக்­குத் தோள் கொடுப்­பது தவிர்க்க இய­லாத ஒன்று என்று சிங்­கப்­பூர் அர­சாங்­கம் தெரி­வித்துள்ளது.

உக்­ரே­னில் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பொருள்க­ளுக்கு ஏற்­று­மதி கட்­டுப்­பா­டு­களை சிங்­கப்­பூர் விதித்­துள்­ளது. குறிப்­பிட்ட சில ரஷ்ய வங்­கி­களு­டன் தொழில் உற­வு­களை வைத்­துக்­கொள்­ளக் கூடாது என்று வங்­கி­க­ளுக்கு அர­சாங்­கம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

"மாஸ்­கோ­வுக்கு எதிராக தடை விதித்­துள்ள நாடு­கள் அடங்கி உள்ள பட்­டி­ய­லில் சிங்­கப்­பூ­ரும் சேர்ந்­துள்­ளது. இதனை அடுத்து ரஷ்­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடைப்­பட்ட 'அர­சி­யல் உறவு' சிறப்பு கண்­கா­ணிப்­பின் கீழ் வைக்­கப்­படும்.

"மிகக் கடு­மை­யான கண்­கா­ணிப்­பின்­கீழ் மட்­டுமே பொரு­ளி­யல் தொடர்­பு­கள் அனு­ம­திக்­கப்­படும்," என்று தூதர் கூறி­னார்.

உக்ரேன் மீது ரஷ்யா படை எடுத்ததைக் கண்டித்து ஐநா பொதுப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை திரு குடேேஷவ் நிராகரித்துவிட்டார்.