தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நண்பர்களாக பாசாங்கு செய்து 280 பேரிடம் $1.2 மில்லியனுக்கு மேல் மோசடி

2 mins read
fcd6818a-07da-45b2-9804-bbe660aab64a
-

தங்­க­ளது நண்­பர்­க­ளா­கப் பாசாங்கு செய்து போசடி செய் தோரி­டம் குறைந்­தது 280 பேர் பணத்தை இழந்து உள்­ள­னர். அவர்­கள் இழந்த மொத்த தொகை $1.2 மில்­லி­ய­னுக்கு மேல் இருக்­கும் என்று காவல்­துறை நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

ஏமாற்­றுப் பேர்­வ­ழி­கள் தொலை­பேசி வழி அழைத்து தாம் அழைக்­கும் நப­ரின் நண்­பர் என்­றும் தங்­க­ளுக்­குப் பண உதவி தேவைப்­படு­கிறது என்­றும் கூறி பணத்தை ஏமாற்­றிப் பெற்­றுக்­கொள்­வார்­கள்.

இந்த முறை­யில் மோசடி செய்­யும் போக்கு அண்­மைய காலத்­தில் மீண்­டும் அதி­க­ரித்து வரு கிறது என்­றும் காவல்­துறை சுட்டி­யது.

பொது­வாக '+' எனும் குறி­யுடன் தொடங்­கும் ஓர் எண்ணில் அந்த ஏமாற்­றுப்­பேர்­வழி அழைப்­பார். தொலை­பே­சி­யில் ஒரு நபரை அழைக்­கும் அந்த ஏமாற்­றுப் பேர்­வழி அந்த நப­ருக்கு சிந்­திக்க நேரம் கொடுக்­கா­மல் "நான் யார் என்று சொல்­லுங்­கள் பார்ப்­போம்?" அல்­லது "என்னை நினைவு இல்­லையா?" என்­றெல்­லாம் கேள்­வி­கள் கேட்டு திசை திருப்­பு­வார்.

அந்த நபர் இது உண்­மை­யி­லேயே தங்­க­ளது நண்­பர் என்று ஒரு நண்­ப­ரின் பெய­ரைச் சொல்­வார். அந்த ஏமாற்­றுப் பேர்­வ­ழி­யும் அந்த நண்­பர்­தான் தாம் என்று கூறி தமது எண்ணை குறித்­துக்­கொள்­ளும்­ப­டி­யும் சொல்­வார்.

சில நாள்­க­ளுக்­குப் பிறகு அந்த ஏமாற்­றுப்­பேர்­வழி மீண்­டும் அந்த நபரை அழைத்து தமக்கு நிதி நெருக்­கடி உள்­ளது என்று கூறி பணத்­தைக் கட­னா­கக் கேட்­பார். அந்த நப­ரும் நம்பி பணத்தை கொடுக்­கப்­பட்ட வங்­கிக் கணக்­குக்கு அனுப்பி வைத்­து­வி­டு­வார். சில நாள்க­ளுக்­குப் பிற­கு­தான் தாம் ஏமாந்துவிட்­டதை அந்த நபர் புரிந்­து­கொள்­வார்.

'+' குறி­யு­டன் தொடங்­கும் எண்­ணி­லி­ருந்து வரும் அழைப்­பு­க­ளைக் கண்டு எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கும்­படி காவல்­து­றை­யி­னர் பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கின்றனர்.

இது­போன்ற ஏமாற்­றுப் பேர்­வழி­க­ளு­டன் தொடர்பு இருந்­தால் 1800-255-0000 எனும் காவல்­துறை எண்­ணு­டன் அல்­லது காவல்­துறை­யின் இணை­யப்­பக்­கம் மூலம் தங்­க­ளு­டன் தொடர்­பு­கொள்­ளு­மா­றும் காவல்­துறை பொது மக்­களைக் கேட்­டுக்­கொள்­கிறது.