இளையர்களுக்கு வழிகாட்டிய 'யூத் கனெக்‌ஷன்ஸ்' பயிலரங்கு

இளையர்களுக்கு வழிகாட்டிய 'யூத் கனெக்‌ஷன்ஸ்' பயிலரங்கு

2 mins read
3ed019fc-a47f-4374-9236-7f67c70728af
'யூத் கனெக்­‌ஷன்ஸ்' பயிலரங்கின் தொழில்நுட்ப ஆதரவு அதிகாரிகள் (இடமிருந்து) உதயா ராகவேந்திரன் மற்றும் தனேஷ்வரி, பயிலரங்கை வழிநடத்திய கார்த்திகா ராமதாஸ். படம்: நற்பணிப் பேரவை இளையர் குழு. -

ஆ. விஷ்ணு வர்­தினி

எதிர்­பா­ராத திருப்­பங்­க­ளைத் தந்த கொவிட்-19 சூழ­லில் தொழில் துறை­யில் அடி­யெ­டுத்து வைக்­கும் இளை­யர்­க­ளுக்­குக் கைகொடுக்க முற்­பட்­டது 'யூத் கனெக்­‌ஷன்ஸ்' பயி­ல­ரங்கு.

மக்­கள் கழக நற்­ப­ணிப் பேரவை இளை­யர் குழு ஏற்­பாடு செய்த இந்­தப் பயி­ல­ரங்கு நேற்று மெய் நிகர் வழி இடம்­பெற்­றது. மூன்று மணி நேரம் நீடித்த பயி­ல­ரங்கு இளை­ய­ரின் சந்தேகங்க­ளைப் போக்க முனைந்­தது.

நிதி நிர்­வா­கம், மன­ந­லப் பரா­மரிப்பு, வாழ்க்­கைக் கல்வி என மூன்று கூறு­க­ளாக இப்­ப­யி­ல­ரங்கு நடத்­தப்­பட்­டது. வெவ்­வேறு துறை­களில் பணி­யாற்­று­வோர் தங்­க­ளது அனு­ப­வங்­களை ப­யி­ல­ரங்கில் முன்­வைத்­த­னர்.

"எந்த முன் அனு­ப­வ­மும் இன்றி ஏர் ஏஷி­யா­வில் இணைந்து அந்த­நிறு­வ­னத்­தைத் தொடங்கி, விரி­வு­படுத்­தி­னேன். அதைத் தொடர்ந்து பல்­வேறு துறை­க­ளுக்கு மாறி பணி­யாற்­றி­னேன். ஒவ்­வொரு படி­யி­லும் எனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன்," என்றார் உத்­தி­பூர்வ ஆலோ­ச­கர் திரு ப்ரிவின் ராஜ்.

இளை­யர்­கள் தங்­க­ள் அடையா ளத்தைத் தெரிந்துகொண்டு அது பற்றி நுட்பமாக சிந்திக்க வேண்டும் என்று கூறி­னார் திரு ப்ரி­வின். அதே சம­யம், நமது இயல்­பைச் சந்­தே­கித்து யாருக்­கா­க­வும் நம்மை மாற்­றிக்­கொள்­ளத் தேவை­யில்லை என்­றும் அவர் கூறி­னார்.

சுவா­ர­சி­ய­மான ஓவிய அங்­கத்­தி­லும் கலந்­து­கொண்­ட­னர் இளை­யர்­கள். மன­நல ஆலோ­ச­க­ரும் கலை­யி­யல் நிபு­ண­ரு­மான திரு­மதி நளினி இவ்­வங்­கத்தை வழி­ந­டத்தி னார். மன­ந­லம் குறித்து உரை­யாற்­றிய திரு­மதி நளினி, "மன­நல ஆரோக்­கி­யம் என்­பது எதிர்­மறை விஷ­யங்­க­ளைத் தவிர்ப்­பது அல்ல. மாறாக, நல்ல தரு­ணங்­க­ளுக்கு மேலும் முக்­கி­யத்­து­வம் அளிப்­பதே ஆகும். கலை­யி­யல் என்­பது முக்­கி­ய­மா­ன­வற்­றின்­மீது நமது கவ­னத்தை ஒருங்­கி­ணைக்­கச் செய்­கின்­றது," என்­றார்.

வாழ்­வின் முக்­கி­யக் கட்­டத்தை எதிர்­நோக்­கி­யுள்ள இளை­யர்­களுக்கு வாழ்­வி­யல் முடி­வு­கள், பொறுப்­பு­கள் குறித்து இந்­நி­கழ்வு விழிப்­பு­ணர்­வூட்­டி­யது.

"இளை­யர்­க­ளுக்­குப் பல தனிப்­பட்ட சவால்­கள் இருக்­க­லாம். எங்கு, யாரி­டம் அவற்­றைப் பற்றி ஆலோ­சனை கேட்­பது என்று அவர்­கள் குழம்­பி­யி­ருக்­க­லாம். சமூ­கத்­தில் இளை­யர்­க­ளுக்கு வழி­காட்­டு­வதே இப்பயி­ல­ரங்­கின் நோக்­கம்," என்­றார் 'யூத் கனெக்­‌ஷன்ஸ்' ஏற்­பாட்­டுக் குழுத் தலை­வர் நீரஜ் லக்ஷ்ம­ணன்.

"மேலும், இளை­யர்­கள் நிபு­ணர்­களி­டம் மனம்­விட்­டுப் பேசி தங்­க­ளது வாழ்க்கை லட்­சி­யங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்ள இத்­த­ளம் வாய்ப்­ப­ளித்­தது. தனிப்­பட்ட முறை­யில் ஆலோ­ச­னை­க­ளை­யும் இளை­யர்கள் பெற­மு­டிந்­தது. பிற இளை­யர்­களி­டம் பேசி தெளி­வு பெறவும் இந்த­நிகழ்வு உதவியது," என்றார் திரு நீரஜ்.

இப்பயிலரங்கில் 120 இளை­யர்­கள் பங்கேற்றனர்.