பிரிவு 377A ரத்தானால் அமைச்சுகள் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும்

2 mins read
03ba30ba-563b-4958-907c-b2085c4db950
-

ஆண்­க­ளுக்கு இடை­யே­யான பாலியல் நடவடிக்கைகளை குற்­ற­மாக்­கும் சட்­டம் ரத்து செய்­யப்­பட்­டால், ஒவ்­வோர் அமைச்­சும் அதன் தாக்­கம் மற்­றும் விளைவு­ க­ளைச் சந்­தித்து, சமூ­கத்­தின் பண்­பு­நெ­றி­க­ளுக்கு ஏற்ப என்ன செய்ய வேண்­டும் என்­ப­தைக் கண்­ட­றிய வேண்­டும் என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் கூறி­யுள்­ளார்.

பிப்­ர­வரி 28 அன்று மேல்­முறை­யீட்டு நீதி­மன்­றம், ஓரி­னச் சேர்க்­கை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக வழக்­குத் தொடர குற்றவியல் தண்ட னைச் சட்டப் பிரிவு தொகுப்­பின் 377A பிரி­வைப் பயன்ப­டுத்த முடி­யாது என்று தீர்ப்­பளித்த பின்­னர், அந்­தச் சட்­டம் குறித்த அவ­ரது கருத்­து­கள் நாடாளு­மன்­றத்­தில் வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தத்­தின்­போது இரண்டு முறை எழுப்­பப்­பட்­டன.

கடந்த வியா­ழக்­கி­ழமை, 'ஃபோகஸ் ஆன் ஃபேமிலி சிங்­கப்­பூர்' அமைப்­பி­னால் ஏற்­பாடு செய்த, 'ஸ்டேட் ஆஃப் ஃபேமிலி 2022' எனும் கருத்­த­ரங்­கில், அர­சாங்­கம் சட்­டத்தை மாற்­றப் போகி­றதா என்­றும் இதனால் ஏற்படக் கூடிய விளை­வு­கள் குறித்­தும் திரு சண்­மு­கத்­தி­டம் கேட்­கப்­பட்­டது. இந்­தச் சட்­டம் ரத்து செய்­யப்­பட்­டால் பள்­ளி­களில் பாலி­யல் கல்­வி­யில் மாற்­றங்­கள் ஏற்­ப­டுமா என்­றும் அமைச்­ச­ரி­டம் கேட்­கப்­பட்­டது என்று உள்­துறை அமைச்சு நேற்று முன்­தி­னம் தனது இணை­யத் தளத்­தில் தெரி­வித்­தது.

இம்­மா­தம் 3ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­தில் பிரிவு 377A குறித்த அர­சாங்­கத்­தின் நிலைப்­பாட்டை தெரி­வித்த திரு சண்­மு­கம், இந்த விவ­கா­ரத்­தில் தனது தனிப்­பட்ட கருத்­து­க­ளைத் தெரி­விக்க மறுத்து­விட்­டார். நாடா­ளு­மன்­றத்­தில் தாம் கூறிய விவ­ரங்­க­ளுக்கு அப்­பால் எது­வும் சொல்ல முடி­யாது என்­றும் நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்த அறிக்கை மிக­வும் கவ­ன­மாக ஆரா­யப்­பட்ட ஒன்று என்­றும் அவர் தெரி­வித்­தார்.

திரு­ம­ணம் மற்­றும் குடும்­பம் தொடர்­பான சமூக அணு­கு­மு­றை­கள் மாறி­வ­ரு­வதை அவர் குறிப்­பிட்­டார். "சிங்­கப்­பூர் பாரம்­ப­ரிய பாலின குடும்ப பண்­பு­நெ­றி­க­ளைக் கொண்ட நிலை­யான சமு­தா­யத்தை நிலை­நி­றுத்­தும். ஆனால் ஓரி­னச் சேர்க்­கை­யா­ளர்­கள் தங்­கள் வாழ்க்­கையை வாழ­வும் சமூ­கத்­திற்குப் பங்­க­ளிக்­க­வும் அது இட­ம­ளிக்­கும்," என்­றும் கூறி­னார்.

சமூ­கத்­தின் பார்­வை­யில் ஏற்­படும் மாற்­றங்­க­ளைத் தெரிந்­து­கொள்ள சட்­டங்­க­ளு­டன் பொதுக் கொள்­கை­களும் உரு­வாக வேண்­டும் என்­றும் அவர் கூறி­னார்.