பேராசிரியர் லியோ: கொவிட்-19 தொடர்பில் மெத்தனம் கூடாது

பேராசிரியர் லியோ: கொவிட்-19 தொடர்பில் மெத்தனம் கூடாது

4 mins read
b96a4b8f-c940-43f3-9dc7-2847ab0e9b71
சிங்கப்பூரின் புகழ்பெற்ற மாதர் பட்டியலில் கடந்த வாரம் இணைக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் லியோ யீ சின். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பேரா­சி­ரி­யர் லியோ யீ சின்­னின் மகன் கடந்த மாதம் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­போது, ​​அவர் தனது அறை­யில் தனி­மைப்­ப­டுத்­திக்கொண்டு உயிர்­வாயுமானி மூலம் தனது உயிர்­வாயு அள­வைக் கண்­கா­ணித்­தார்.

அவ­ரது தொண்டை மிக­வும் புண்­ணாக இருந்­தது. நல்­ல­வே­ளை­யாக அவர் குண­ம­டைந்­தார். அவ­ரது வீட்­டில் வேறு யாருக்­கும் தொற்று இல்லை.

தனது மகன் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து குண­மா­கி­யது குறித்து பேரா­சி­ரி­யர் லியோ­வுக்கு நிம்­மதிப் பெரு­மூச்சு.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழின் நிர்­வாக ஆசி­ரி­யர் சுமிக்கோ டானின் 'லஞ்ச் வித் சுமிக்கோ' பகு­திக்கு இம்­முறை தொற்­று­நோய்­களுக்­கான தேசிய நிலை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் பேரா­சி­ரி­யர் லியோ யீ சின் நேர்­கா­ணல் செய்­யப்­பட்­டார்.

அப்­போது அவர் கொவிட்-19 கிரு­மித்­தொற்றை எதிர்க்­கும் தேசிய முயற்­சி­யில் தாம் பெற்ற அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டார்.

கொவிட்-19 கிருமி தோன்­றிய இரண்­டுக்­கும் மேற்­பட்ட ஆண்­டு­களில், அவர் துன்­ப­க­ர­மான கடு­மை­யான சம்­ப­வங்­களை எதிர்­கொண்­டார்.

"நாங்­கள் ஏரா­ள­மான நோயாளி­களைக் கண்­டோம். ரத்த ஓட்­டம் இல்­லா­த­தால், கைகள், கால்­கள் கடும் தொற்று கார­ண­மாக கருப்­பாக மாறி­ன. உண்­மை­யில் அதைப் பார்ப்­ப­தற்கு மிக­வும் வேத­னை­யாக இருந்­தது," என்­றார் திரு­வாட்டி லியோ.

கொவிட்-19 மட்­டு­மின்றி அது தொடர்­பான சிக்­கல்­க­ளு­டன் போராடி தீவிர சிகிச்­சைப் பிரி­வில் பல மாதங்­களை நோயா­ளி­கள் கழித்­த­னர்.

கொவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவது பெரிய சவால்

"கொவிட்-19-ஐ எதிர்த்­துப் போரா­டு­வது என்­பது மிக­வும் சவா­லா­னது. கிருமி உரு­மா­றிக்கொண்­டி­ருக்­கும்­போது, அத­னு­டன் தொடர்ந்து போரா­டு­வ­து­தான் உச்­சக்­கட்ட சவால்.

"ஓமிக்­ரான் டெல்­டாவை விட வீரி­யம் குறை­வா­னது என்று கூறப்­பட்­டா­லும் சில பிரி­வி­னர் குறிப்­பாக, முதி­ய­வர்­கள் மற்­றும் ஏற்­கெ­னவே உள்ள மருத்­து­வப் பிரச்­சி­னை­கள் உள்­ள­வர்­கள், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடப்­பட்­ட­வர்­கள் உட்­பட கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

"டெல்டா உருமாறிய கிரு­மி­யு­டன், மோச­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு உட­ன­டி­யாக தீவிர சிகிச்­சைப் பிரி­வில் கவ­னிப்பு தேவை," என்று அவர் குறிப்­பிட்­டார்.

ஓமிக்­ரான் ஒரு நோயா­ளி­யின் தற்­போ­தைய மருத்­துவ நிலைமை களை மோச­மாக்­கும். எனவே, கொவிட்-19 நோயா­ளி­க­ளின் அறி­கு­றி­கள் லேசா­ன­தாக இருந்­தா­லும், அந்­தக் கிருமி அவ­ருக்கு இருக்­கும் மற்ற நோய்­களை மோச­ம­டை­யச் செய்­ய­லாம்.

"ரத்த அழுத்­தம் குறைந்­து­விட்­ட­தால் அவர்­கள் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு வரப்­ப­டு­கி­றார்­கள். அவர்­கள் மிக­வும் மயக்­க­மான நிலை­யில் இருப்­ப­து­போல் உணர்­வார்­கள். அவர்­கள் கீழே விழுந்­தி­ருக்­க­லாம் அல்­லது அவர்­க­ளுக்கு லேசான நிமோ­னியா காய்ச்­சல் இருந்­தி­ருக்­க­லாம்," என்று பேரா­சி­ரி­யர் விவ­ரித்­தார்.

இந்த வய­தான நோயா­ளி­கள் குண­ம­டை­ய­வும் மறு­வாழ்வு பெற­வும் நீண்ட காலம் தேவைப்­படும். இது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறை­யில் பல்­வேறு அழுத்­தங்­களை ஏற்­படுத்­து­கிறது.

மருத்­து­வப் பிரச்­சி­னை­க­ளால் ஏற்­கெ­னவே பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் வய­தா­ன­வர்­க­ளைத் தவிர, ஓமிக்­ரான் தொற்­றுக்கு ஆளா­கும் அதிக ஆபத்தை எதிர்­நோக்­கும் மற்­றொரு பிரி­வி­னர் சிறு­நீ­ரக நோயா­ளி­கள், ரத்த சுத்­தி­க­ரிப்பை மேற்­கொண்டு வரு­ப­வர்­கள், நாள்­பட்ட நோயா­ளி­கள் ஆகி­யோர்.

இந்­தக் கிருமி தொடர்ந்து உரு­மாறி வரு­வ­தால் அடுத்த ஓர் ஆண்­டுக்கு இந்த நிலைமை தொட­ரும் என்று அவர் கணித்­துள்­ளார்.

இன்­னும் அதிகமான கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் இருந்­தால் கிருமி இன்­னும் வேக­மாக உரு­மாறி எதிர்­பா­ராத விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும். ஆக, கிரு­மித்­தொற்­றைக் கட்­டுக்­குள் கொண்டு வரு­வது மிக­வும் முக்­கி­யம். இது கிருமி உரு­மா­று­வ­தை­யும் மெது­வாக்­கும் என்­றார் திரு­வாட்டி லியோ.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று மறைந்­து­வி­டும் சாத்­தி­யம் உண்டா?

"இது மறைந்­து­வி­டாது. வைரஸ் இங்கே தொடர்ந்து நீடிக்­கும். அதன் தொடர்­பில் சில அம்­சங்­களை நாம் கூர்ந்து கவ­னிக்க வேண்­டும்," என்று அவர் எச்­ச­ரித்­தார்.

ஒன்று, கொவிட்-19 கிருமி எவ்­வாறு மனி­தர்­க­ளுக்­குத் தொற்­றி­யது. அவர்­க­ளி­டம் மீண்­டும் மீண்­டும் தொற்­றும் திறன் ஆற்­றல் எவ்­வாறு அமைந்­தது என்­பது.

இரண்டு, கிருமி இப்­போது பல்­வேறு விலங்­கி­னங்­களை எவ்­வாறு பாதிக்­கிறது. அப்­படி என்­றால் அதி­லேயே பல்­வேறு கிருமி வகை­கள் உள்­ளன என்­பது.

இந்த விலங்­கி­னங்­களில் உள்ள கிருமி நகல் வடி­வம் எடுக்­க­லாம் மற்­றும் உரு­மா­ற­லாம். மனி­தர்­கள் விலங்­கு­க­ளுக்கு கிரு­மி­யைப் பரப்பு ­வ­தும் பின்­னர் விலங்­கு­க­ளி­லி­ருந்து கிருமி மனி­த­ருக்­குப் பரவுவதும் மிக­வும் உண்­மை­யா­னது.

சிங்­கப்­பூ­ரில் ஓமிக்­ரான் கிரு­மி­யின் உச்­சம் கடந்­து­விட்­டதா?

சிங்­கப்­பூ­ரில் ஓமிக்­ரான் கிரு­மி­யின் உச்­சம் கடந்­து­விட்­டதா என்று கேட்­கப்­பட்­ட­தற்கு, பேரா­சி­ரி­யர் லியோ கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் படிப்­ப­டி­யா­கக் குறை­யும் என்று பலர் எதிர்­பார்ப்­ப­தால், தானும் நம்­பிக்­கை­யு­டன் இருப்­ப­தா­கக் கூறி­னார்.

இந்­தப் பெருந்­தொற்று, மக்­கள் தங்­க­ளுக்கு சுவா­சப் பிரச்­சினை வரா­மல் தவிர்ப்­ப­தற்கு என்­னென்ன வழி­க­ளைக் கடைப்­பி­டிக்­க­லாம் என்று தங்­க­ளுக்­குள்­ளேயே ஓர் ஒழுங்­கு­மு­றையை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வழி­வ­குத்­துள்­ளது என்று பேரா­சி­ரி­யர் லியோ கரு­து­கி­றார்.

"கொவிட்-19க்கு முந்தைய வாழ்க்கைக்குத் திரும்ப மக்கள் விரும்புவது மனித இயல்பு. ஆனால் அதேநேரத்தில், கொவிட்-19 நமக்குக் கற்றுக் கொடுத்ததை நாம் ஆராய்வதும் முக்கியம்," என்று அவர் குறிப்பிட்டார்.