உக்ரேனில் இருந்து முட்டை, சமையல் எண்ணெய் போன்றவற்றையும் ரஷ்யாவிலிருந்து கடலுணவு, மதுபான வகைகள் போன்ற வற்றையும் சிங்கப்பூர் இறக்குமதி செய்தாலும் அவற்றின் அளவு குறைவு என சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த இரு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பூசல், எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணமாக அமைகிறது.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்படைந்த உணவுப் பொருள் விநியோகச் சங்கிலியை இது மேலும் மோசமடையச் செய்யும்.
உலகளாவிய உணவுப் பொருள் விலை ஏற்றத்திற்கான நெருக்கடியை இந்த இரு காரணிகளும் ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இங்குள்ள ஃபேர்பிரைஸ், டெய்ரி ஃபார்ம் மற்றும் ஷெங் சியோங் போன்ற பேரங்காடிகள், தங்களிடம் அத்தியாவசியப் பொருள்கள் போதுமான கையிருப்பு இருப்பதையும் அவற்றின் விலைகள் கட்டுப்படியாகக் கூடியதாகத் தொடருவதையும் உறுதிசெய்ய பலதரப்பட்ட விநியோகத் தளங்களைப் பயன்படுத்துகின்றன.
உதாரணத்திற்கு, ஃபேர்பிரைஸின் இறக்குமதிப் பொருள்கள் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாக, தற்போது 170க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் வட்டாரங்களிலிருந்து உணவுப் பொருள்களை சிங்கப்பூர் இறக்குமதி செய்வதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறியது.
ரஷ்ய-உக்ரேன் போர் நிலவரத்தைத் தாங்கள் உற்றுக் கவனித்து வருவதாக பேரங்காடிக் குழுமங்கள் அதனிடம் தெரிவித்தன.
இவ்விரு நாடுகளும் உலக அளவில் உணவு தானியம் மற்றும் சமையல் எண்ெணய் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் ஆகப் பெரிய அளவிலான விநி யோகத்தை மேற்கொள்பவை.
ஆனால், இந்தப் போரால் தங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என்று ஷெங் சியோங் பேரங்காடி ேபச்சாளரான பெண்மணி ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம் ஸிடம் தெரிவித்தார்.

