சிங்கப்பூரின் கடலோர விநியோக முறையை சீரமைக்க ஏழு குழுமங்கள் கூட்டு சேர்ந்துள்ளன. அவை இதற்காக $20 மில்லியனுக்கு மேல் முதலீடு செய்ய உள்ளன.
ஷாங்ரி-லா சிங்கப்பூர் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது 'கடலோர நீடித்த நிலைத்தன்மை கூட்டணி' ஏற்படுத்தப்பட்டது. இக்கூட்டணி பல்வேறு யோசனைகளை முன்வைத்தள்ளது.
ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) பறக்கத் தொடங்கும் தளமாகப் பயன்படக்கூடிய கப்பல்கள், மின்சாரப் படகுகள் போன்றவற்றுக்கான கடல்துறை கம்பியில்லா இணையத் தொடர்பு மின்னூட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுவதும் அந்த யோசனைகளுள் அடங்கும்.
ஒரே இடத்தில் அமைந்திருக்கக்கூடிய மின்னூட்ட மையத்துடன் நடமாடும் மின்னூட்ட மையமும் அடங்கிய கட்டமைப்பு ஒன்றை இக்கூட்டணி உருவாக்கும். மின்சார கார்கள் பயன்படுத்திய மின்
கலன்களை மறுசீரமைத்து கப்பல்
களுக்கான மின்சார விநியோகத்திற்குப் பயன்படுத்துவதன் மூலம் மின் பொருள் கழிவைத் தடுக்க முடியும். குவோக் (சிங்கப்பூர்) மரிடைம் குரூப், ஏ*ஸ்டார் அமைப்பு, ஜென்பிளஸ், ஜூரோங் போர்ட் சிங்கப்பூர், டிகாம்ஸ், சீ ஃபாரஸ்ட் மற்றும் டெஸ் ஆகிய குழுமங்கள் ஒன்று சேர்ந்து இந்தக் கூட்டணியை அமைத்துள்ளன.

