விமானங்களில் உயர்தர உணவு வகைகளை விநியோகிப்பதை முக்கிய தொழிலாகக் கொண்டுள்ள 'சேட்ஸ்' நிறுவனம், தனது தொழிலுக்காக 150 மில்லியன் செலவில் மாபெரும் உணவு மையத்தை அைமக்கப்போவதாக நேற்று அறிவித்தது.
இந்த நிலையம், ஜூரோங் புத்தாக்க மாவட்டத்தில் அமையும்.
இதற்காக 30 ஆண்டு குத்தகைக் காலத்துடன் கூடிய நிலத்தை ஜேடிசி கார்ப்பரேஷனிடமிருந்து பெற்றுள்ளதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் 'சேட்ஸ்' குறிப்பிட்டது.
வரும் 1ஆம் தேதியிலிருந்து தொடங்கும் குத்தகைக் காலத்தின் மொத்த வாடகையின் மதிப்பு $42.6 மில்லியன் ஆகும்.
தற்போது பாண்டான் லூப்பில் ஜேடிசியின் பல்வேறு குத்தகை இடங்களில் சேட்ஸ் தனது உணவு விநியோகிப்புத் தொழிலை நடத்தி வருகிறது.
இவை அனைத்தும் புதிய உணவு மையத்துக்கு மாற்றப்படும்.
நவீன தானியக்க உணவுத் தயாரிப்பு சாதனங்கள், இணையம் மூலமாக இயக்கப்படும் வசதிகள் ஆகியற்றுடன் உணவு மையம் ஆற்றலுடன் செயல்படும் என்று சேட்ஸ் கூறியது.
புதிய பொருள்கள் மற்றும் சேவைகளை சோதிக்கும் நிலையமாகவும் அது இருக்கும்.
புதிய சந்தைகளில் உணவுக்கான தீர்வுகளை வர்ததகமயமாக்கும் வசதிகளும் புதிய மையத்தில் ஏற்படுத்தப்படும்.
புதிய உணவு மையம் அமைக்கப் படுவதாலும் குத்தகை ஒப்பந்தத் தாலும் 2022 மார்ச் 31ஆம் தேதி முடிவடையும் நிதியாண்டில் நிறுவனத்தின் சொத்திலும் வருமானத்திலும் பெரிய அளவு தாக்கம் இருக்காது என்று சேட்ஸ் நேற்று தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிங்கப்பூரின் பிரதான பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள சேட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு, 0.5 விழுக்காடு அல்லது இரண்டு காசு கூடி 3.92 வெள்ளிக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டதாக தெரி விக்கப்பட்டது.

