$8,000 மதிப்புள்ள நகை, பணம் திருட்டு; இந்ேதானீசிய பணிப்பெண்ணுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை

2 mins read
7f5f4c34-d246-4bd1-a50a-64bb121d32d9
-

சிங்­கப்­பூர் முத­லா­ளி­யால் நன்­றாக நடத்­தப்­பட்ட இல்­லப் பணிப்­பெண் ஒரு­வர், தன் மீது முத­லாளி வைத்­தி­ருந்த நம்­பிக்­கை­யைப் பயன் படுத்தி எட்­டா­யி­ரம் வெள்ளி மதிப்­புள்ள பொருட்­க­ளை­யும் ரொக்­கத்­தை­யும் திரு­டி­யி­ருக்­கி­றார்.

வினா கியுேரா­து­னைனி, 27, எனும் அந்த இந்­தோ­னீ­சி­யப் பணிப்­பெண், திரு­டிய பெரும்­பா­லான நகை­களை அடகு வைத்து தனது கடனை அடைக்­க­வும் நண்­பர் களுக்கு விருந்து, நகை­கள் வாங்­க­வும் பயன்­ப­டுத்­தி­னார். ஒரு பகுதி ரொக்­கத்தை அவர் தனது சொந்த நாட்­டில் உள்ள வீட்­டுக்கு அனுப்பி வைத்­தார்.

நேற்று நடை­பெற்ற நீதி­மன்ற விசா­ர­ணை­யில் வினா தன் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்கொண்­டார். அவ­ருக்கு ஆறு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

நாற்­பது வயது சிங்­கப்­பூர் மாது ஒரு­வர், அவரை 2018 ஜூலை­யில் கிள­மெண்­டி­யில் உள்ள தனது வீட்­டில் வேலைக்கு அமர்த்­திக்கொண்­டார். அங்கு வீட்டு வேலை­களைச் செய்து முத­லா­ளி­யின் குழந்­தை­களை அவர் கவ­னித்­துக்கொண்­டார்.

கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் முத­லா­ளி­யின் படுக்கை அறையைச் சுத்­தம் செய்­த­போது சாவி ஒன்று இழுப்­புப் பெட்­டி­யில் தொங்­கிக் கொண்­டி­ருந்­ததை அவர் பார்த்­தார்.

அதனை திறந்­து­பார்த்­த­போது அதில் 2,000 வெள்ளி ரொக்­க­மும் சில தங்க நகை­களும் இருப்­ப­தைக் கண்­டார். வினா அவற்றைத் திருட முடிவு செய்­தார்.

திரு­டிய பொருட்­க­ளை­யும் பணத்­தை­யும் மறைத்­து­வைத்த வினா பின்­னர் பெரும்­பா­லான நகை­களை அடகு வைத்­த­தாக நீதி­மன்­றத்­தில் அர­சாங்க விசா­ரணை அதி­காரி தெரி­வித்­தார்.

இவ்­வாண்டு ஜன­வரி 22ஆம் தேதி சில நகை­கள் காணா­மல்­போ­னதை அறிந்த முத­லாளி காவல்­து­றை­யி­டம் புகார் அளித்­தார்.

வினா மீது சந்­தே­கம் இருப்­ப­தா­க­வும் காவல்­து­றை­யி­டம் முத­லாளி கூறி­யி­ருந்­தார்.

இதை­ய­டுத்து கைது செய்­யப்­பட்ட வினா மீது ஜன­வரி மாதம் இறு­தி­யில் குற்­றம்­சாட்­டப்­பட்­டது.

"$180 மதிப்­புள்ள நகை குற்­ற­வா­ளி­யி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்­டது. மற்ற நகை­கள் வெவ்­வேறு அடகு கடை­க­ளி­லி­ருந்து மீட்­கப்­பட்­டன, ெராக்­கத்தை மீட்க முடி­ய­வில்லை." என்று விசா­ரணை அதி­காரி மேலும் தெரி­வித்­தார்.