சிங்கப்பூரிலேயே வடிவமைக்கப்பட்ட இரு கலைப் படைப்புகள், விண்வெளியில் உள்ள அனைத்துலக விண்வெளி நிலையத்தை ெசன்று அடைந்துள்ளன.
அனைத்துலக கலைப் படைப்பாளர்களின் 64 நிலவுக்கான காட்சிப் பொருள்களின் ஒரு பகுதியாக அவை விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சரக்குக் கலன் மூலம் நேற்று விண்வெளி நிலையத்தை சிங்கப்பூர் கலைப் படைப்புகள் அடைந்தன என்றும் வெவ்வேறு வடிவிலான கலைப் படைப்புகள் புவியீர்ப்பு சக்தி இல்லாத இடத்தில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை படைப் பாளர்கள் கற்றுக் கொள்வதற்காக பத்து மாதங்கள் அங்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிலவுக்கான காட்சியகத் திட்டத்தின் மூலம் முதலில் 100 வேலைப்பாடுகள் 2025ல் நிலவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு வேலைப்பாடும் கனசதுர சென்டி மீட்டர் அளவைக் கொண்டது.
சிங்கப்பூரின் இரு கலைப் படைப்புகளும் முப்பரிமாண அச்சு இயந்திரத்தின் மூலம் உருவாக்கப் பட்டவை.
தனிச்சிறந்த வடிவமைப்பில் உள்ள இரண்டின் ஒவ்வொரு பக்கத்தின் நீளம் 0.98 சென்டி மீட்டர்.
சிங்கப்பூரரான கட்டட வடி வமைப்பாளரும் கலைஞருமான லக்ஷ்மி மோஹன்பாபு இரண்டையும் மனிதகுலத்தின் ஒற்றுமை, பன் முகத்தன்மை, சிக்கல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வடி வமைத்திருந்தார்.
கியூப் ஆஃப் இண்டராக்ஷன் எனும் முதல் கனசதுர கலைப் படைப்பு, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிங்கப்பூர் முப்பரிமாண அச்சு நிலையத்தில் இணைப் பேராசிரியர் டேனி நியூ உதவியுடன் உருவாக்கப்பட்டது.
இரண்டாவது கலைப்படைப்பு, மாறும் படிகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நான்கு தனிப்பட்ட முகங்களைக் கொண்டுள்ளது.
என்டியுவின் இயந்திரவியல், விண்ெவளி பொறியியல் பள்ளி, உலோக அறிவியல், பொறியியல் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த தனது குழுவுடன் உதவி பேராசிரியர் மேட்டியோ செய்ட்டா இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருந்தார்.
இந்தத் திட்டத்திற்கு 'நேமிக்' எனும் (National Additive Manufacturing Innovation Cluster) தேசிய அளவிலான திட்டம் நிதி ஆதரவு அளித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.