சட்டவிரோத குதிரைப் பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நம்பப் படும் ஐவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை அன்று வாம்ேபா டிரைவில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் $3,000க்கும் மேற்பட்ட ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மூவர் பந்தயப் பிடிப்பில் ஈடுபட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
இரண்டு பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஐவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.
பந்தயக்காரர்களிடத்தில் பந்தயம் கட்டுபவர்களுக்கு $5000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று காவல்துறை எச்சரித்தது.
பந்தயக்காரர்களுக்கு $20,000 முதல் $200,000 வரை அபராதமும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
தொடர்ந்து இதுபோன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுக்கப்படும் என்றும் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்தது.