தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போனசுக்கு பதில் வீட்டிலிருந்தே வேலை

3 mins read
739b5241-ff69-4013-a879-7ee736517f8d
-

சிங்­கப்­பூர் ஊழி­யர்­கள் பத்­தில் நான்கு பேர், மிகப் பெரிய போனஸ் எனும் ஊக்­கத்­தொ­கை­யைக் காட்­டி­லும் வீட்­டில் இருந்தே வேலை செய்­யும் ஏற்­பாட்டை விரும்­பு­வ­தாக அண்மைய ஆய்­வில் கருத்­து­ரைத்­துள்­ள­னர். மனி­த­வ­ளத் தீர்­வு­க­ளுக்­கான ராண்ட்ஸ்­டட் நிறு­வ­னம் அந்­தக் கருத்­தாய்வை நடத்­தி­யது.

ஏறக்­கு­றைய ஈராண்­டாய் வீட்­டில் இருந்தே வேலை­செய்து வரும் நிலை­யில், கருத்­தாய்­வில் கலந்­து­கொண்ட ஊழி­யர்­களில் 41 விழுக்­காட்­டி­னர் அவ்­வாறு குறிப்­பிட்­ட­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

வீட்­டில் இருந்தே வேலை செய்­வ­தால் பயண நேர­மும் செல­வும் மிஞ்­சு­வது, கூடு­த­லான தனிப்­பட்ட நேரம் கிடைப்­பது, உற்­பத்­தித் திறன் அதி­க­ரிப்பு ஆகி­வற்­றைக் கருத்­தில்­கொண்டு அவர்­கள் அவ்­வாறு கூறி­யி­ருக்­க­லாம் என்று கரு­தப்­ப­டு­கிறது.

ஆய்­வில் கலந்­து­கொண்­ட­வர்­களில் கிட்­டத்­தட்ட 80 விழுக்­காட்­டி­ன­ருக்கு 2022ல் சம்­பள உயர்வு கிடைத்­தது. அவர்­களில் ஒன்பது விழுக்­காட்­டி­ன­ருக்கு 20 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மான சம்­பள உயர்வு கிட்­டி­யது.

கலந்­து­கொண்­ட­வர்­களில் பாதிப் பேர் இந்த ஆண்டு போனஸ் கிடைக்­கும் என்று கூறி­னர்.

அவர்­களில் 43 விழுக்­காட்­டி­னர் சரா­ச­ரி­யாக ஒன்று முதல் மூன்று மாதம் வரை­யி­லான சம்­ப­ளத்தை ஊக்­கத் தொகை­யா­கக் கிடைக்­கும் என்று எதிர்­பார்க்­கின்­ற­னர். அத்­து­டன் 13ஆம் மாதச் சம்­ப­ள­மும் அவர்­க­ளுக்­குக் கிடைக்­கும்.

ராண்ட்ஸ்­டட் நிறு­வ­னம் 2019ல் நடத்­திய கருத்­தாய்­வில், 83 விழுக்­காட்­டி­னர் அந்த ஆண்டு போனஸ் கிடைக்­கும் என்ற எதிர்­பார்ப்பை முன்­வைத்­தி­ருந்­த­னர்.

அவர்­களில் 69 விழுக்­காட்­டி­னர் ஒன்று அல்­லது இரண்டு மாதச் சம்­ப­ளத்தை போன­சாக எதிர்­பார்த்­த­னர்.

சம்­ப­ளம் மற்­றும் போனஸ் பற்­றிய எதிர்­பார்ப்­பு­க­ளுக்­கான அண்­மைய கருத்­தாய்வு, பிப்­ர­வரி 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இணை­யம் வழி நடத்­தப்­பட்­டது. சிங்­கப்­பூ­ரில் வேலை­பார்க்­கும் 300 ஊழி­யர்­க­ளின் கருத்­து­கள் திரட்­டப்­பட்­டன.

அலு­வ­ல­கம் செல்­லா­மல் வீட்­டில் இருந்தே பணி­பு­ரிய ஊழி­யர்­கள் விருப்­பம் தெரி­வித்­தி­ருப்­ப­தைச் சுட்­டிய ராண்ட்ஸ்­டட் நிறு­வ­னம், முத­லா­ளி­கள் கிரு­மிப்­ப­ர­வ­லுக்­குப் பிந்­திய வேலை நடை­மு­றைக் கொள்­கை­களை கூடிய விரை­வில் வகுத்­துக்­கொண்­டால் ஊழி­ய­ர­ணி­யைத் தக்­க­வைத்­துக் கொள்­ள­லாம் என்று குறிப்­பிட்­டது.

"பணி­யி­டத்­துக்கு நேரில் சென்­ற­போது காலை நேரப் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லில் அடித்­துப் பிடித்து அவ­ச­ரப்­பட வேண்­டும். அத்­த­கைய நெருக்­கடி வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்­கும் அமைப்­பில் இல்லை," என்­றார் தனி­யார் துறை பொறி­யா­ள­ரான 51 வயது திரு மணி­கண்­டன் நாக­ரா­ஜன்.

"நான் கர்ப்­பி­ணி­யாக இருந்­த­தால் வீட்­டில் இருந்து வேலை பார்ப்­பது மிக உத­வி­யாக இருந்­தது. அதன் பிறகு எனக்­குக் குழந்தை பிறந்­த­போ­தும் அவ­னைப் பகு­தி­நே­ர­மா­கப் பார்த்­துக்­கொண்டு வேலை­யி­லும் என்­னால் கவ­னம் செலுத்த முடிந்­தது," என்­றார் வை-3

டெக்­னா­லஜிஸ் நிறு­வ­னத்­தில் மென்­பொ­ருள் தயா­ரிப்­ப­வ­ரா­கப் பணி­யாற்­றும் 33 வயது திரு­மதி சிவ­சங்­கரி சுப்­பிர­ம­ணி­யம்.

"எட்டு மணி­நேர வேலை முறையை வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் அமைப்­பில் எதிர்­பார்க்க முடி­யாது. ஒவ்­வொரு நாளும் அதிக நேரம் வேலை செய்­யும் கட்­டா­யம் ஏற்­பட்­டது.

"பணி­யி­டத்­தில் நேர­டி­யாக வேலை செய்­யும்­போது நமது உழைப்­பும் அர்ப்­ப­ணிப்­பும் வெளிப்­ப­டை­யா­கத் தெரி­யும்.

"வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும்­போதோ இன்­னும் கடி­ன­மாக உழைத்­தால் மட்­டுமே அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வோம் என்ற நிலைமை ஏற்­பட்­டுள்­ளது போன்று தென்­ப­டு­கிறது. இத­னால், நேர­டி­யாக பணி­பு­ரி­வ­தையே நான் விரும்­பு­கி­றேன்," என்­றார் 53 வயது திட்ட நிர்­வாகி திரு டி.ஏ வெங்­க­டேஷ்.

கூடுதல் செய்தி:

ஆ. விஷ்ணு வர்தினி

சம்பளம் மற்றும் போனஸ் பற்றிய கருத்தாய்வில் 41% சிங்கப்பூர் ஊழியர்களின் எதிர்பார்ப்பு