தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்குப் புதிய விதிகள்: அரசாங்கம் ஆலோசனை

தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்குப் புதிய விதிகள்: அரசாங்கம் ஆலோசனை

2 mins read
0ba20493-c134-41ab-94f9-4d3adf0036f2
-
multi-img1 of 2

சிங்­கப்­பூ­ரில் இப்­போது பிர­ப­ல­மாகி­வ­ரும் சரக்கு விநி­யோ­கத்­திற்­கான மோட்­டார்­சைக்­கிள்­கள், சாய்ந்து அம­ரும் இருக்­கை­யு­டன் கூடிய மிதி­வண்­டி­கள் ஆகி­யவை தொடர்­பில் புதிய விதி­களை அமல்­ப­டுத்த வேண்­டுமா என்­பது குறித்து, உந்து நட­மாட்ட ஆலோ­ச­னைக் குழு பரி­சீ­லித்­து­வ­ரு­கிறது. சிங்­கப்­பூ­ரின் நடை­பா­தை­களும் சைக்­கி­ளோட்­டப் பாதை­களும் பாது­காப்­பான முறை­யில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதை உறு­தி­செய்­வது அந்­தக் குழு­வின் பணி.

தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னங்­களை யாரெல்­லாம் பயன்­ப­டுத்­த­லாம் என்­ப­தன் தொடர்­பி­லும் மேலும் கடு­மை­யான விதி­களை விதிப்­பது குறித்­தும் அது ஆலோ­சித்து வரு­கிறது.

நட­மாட்­டப் பிரச்­சினை இல்­லா­த­வர்­களும் தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தா­கப் புகார்­கள் பதி­வா­ன­தைத் தொடர்ந்து அவ்­வாறு ஆலோ­சிக்­கப்­ப­டு­கிறது.

போக்­கு­வ­ரத்து அமைச்­சுக்­கான மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ள­ரும் உந்து நட­மாட்ட ஆலோ­ச­னைக் குழு­வின் தலை­வ­ரு­மான திரு பே யாம் கெங் நேற்று இந்­தத் தக­வல்­களை வெளி­யிட்­டார். அண்­மை­யில் பிர­ப­ல­மா­கி­வ­ரும் போக்­கு­கள் சிக்­கல் விளை­விக்­கும் பிரச்சினைகளாக உரு­வெ­டுக்­கும் முன்பே குழு அதற்­கான தீர்­வு­க­ளைத் திட்­ட­மி­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

எஸ்­பி­எச் வானொலி நிலை­ய­மான ஒன் எஃப்எம் 91.3க்கு அளித்த பேட்­டி­யில் அவர் அவ்­வாறு கூறி­னார்.

தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னங்­கள் வாகன உரி­மைச் சான்­றி­தழ் தேவைப்­ப­டாத மோட்­டார் சைக்­கிள்­க­ளைப் போல ஆகி­வ­ரு­வ­தா­கக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் பல­ரும் புகார் அளித்­த­தா­கத் திரு பே கூறி­னார்.

அத­னால் புதிய விதி­கள் குறித்து ஆலோ­சிக்­கப்­ப­டு­வ­தாக அவர் சொன்­னார்.

2020ஆம் ஆண்டு நடை­பா­தை­களில் தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னங்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டது.

ஆனால் மின்-சக்­கர நாற்காலி­க­ளுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்­கப்­பட்­டது. அத்­த­கை­ய­வற்றை மருத்­து­வச் சிக்­கல்­கள் உள்­ள­வர்­கள் பயன்­ப­டுத்­து­வது அதற்­குக் கார­ணம். அத்­த­கைய விதி­வி­லக்கை யாரும் தவ­றா­கப் பயன்­படுத்­து­வ­தைத் தவிர்க்­கும் நோக்­கில் புதிய விதி­கள் குறித்­துக் கலந்­தா­லோ­சிக்­கப்­ப­டு­வ­தா­கத் திரு பே கூறி­னார்.