ஓடிச்சென்று தீயை அணைத்தவர்களுக்கு விருது

ஓடிச்சென்று தீயை அணைத்தவர்களுக்கு விருது

1 mins read
d7f12fb2-5980-4c0b-b7c8-fb053b786cdb
-
multi-img1 of 2

சிங்­கப்­பூர்க் குடி­மைத் தற்­காப்­புப் படை, வெவ்­வேறு சம்­ப­வங்­களில் குடி­யி­ருப்­புப் பேட்­டை­யில் மூண்ட தீயை அணைக்­கத் துணிச்­ச­லு­டன் செயல்­பட்ட இரு­வ­ருக்கு விருது வழங்கி கௌர­வித்­துள்­ளது.

சென்ற ஆண்டு நவம்­பர் 10ஆம் தேதி, ஜூரோங் ஈஸ்ட்­டில் அமைந்­தி­ருக்­கும் கூட்­டு­ரிமை வீட்­டின் 14ஆவது தளத்­தில் உள்ள வீட்­டில் தீ மூண்­ட­போது, அண்டை வீட்டுக்­கா­ர­ரான 48 வயது கத்­ரானி பிட்­டன் ஓடோ­டிச் சென்று உதவினார்.

சமை­ய­ல­றை­யில் மூண்ட தீயை, தங்­கள் கட்­ட­டத்­தில் உள்ள தீய­ணைப்­புக் கரு­வி­யின் உத­வி­யு­டன் அணைத்­தார்.

நேற்று விருது பெற்ற மற்­றொ­ரு­வர் ஜூரோங் ஈஸ்ட்­டில் அமைந்­தி­ருக்­கும் ஜே கேட்வே கூட்­டு­ரிமை வீடு­க­ளின் பாது­காப்­புக் கண்­கா­ணிப்­பா­ள­ரான 36 வயது ஷாம்­கு­மார் கெண்டரா­ஜன்.

சென்ற ஆண்டு டிசம்­பர் 18ஆம் தேதி அவர் பணி­யில் இருந்­த­போது தீ மூண்­ட­தற்­கான எச்­ச­ரிக்கை மணி ஒலித்­தது.

ஒன்­ப­தா­வது மாடி­யில் புகை­யைப் பார்த்த அவர் படி­க­ளின் வழி­யாக விரைந்து சென்­றார்.

குடி­யி­ருப்­பா­ளர்­கள் இரு­வ­ரின் உத­வி­யு­டன் தண்­ணீ­ரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்­தார்.

கத்­ரானி, ஷாம்­கு­மார் இரு­வ­ருக்­கும் சிங்­கப்­பூர்க் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் நான்­காம் பிரிவு விருது வழங்­கிப் பாராட்­டி­யது.

அதன் தள­ப­தி­யான கர்­னல் கோ பூன் ஹான், பொது­மக்­கள் அடிப்­படை தீய­ணைப்பு போன்ற உயிர்­காக்­கும் திறன்­க­ளைக் கற்­றுக்­கொள்­ளு­தல் நல்­லது என்று கூறி­னார்.

அவ­சர காலத்­தில் முன்­வந்து உதவ அது உத­வும் என்­றார் அவர்.