சவரக்கத்தியால் (பிளேடு) இரு
வரைக் காயப்படுத்தியதாக 33 வயது ஆடவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
முகம்மது எஸ். முஹிபுல்லா சையத் அப்துல்லா எனப்படும் அந்த சிங்கப்பூரர் கடுமையான ஆயுதத்தால் வேண்டுமென்றே காயம் ஏற்
படுத்தியதாக இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
திங்கட்கிழமை நிகழ்ந்த சம்பவத்தில் ஜான் ரயான் புகிஸ்தான் ஜிமெனஸ், 38, என்பவரின் கழுத்தில் ஆடவர் கத்தியால் வெட்டியதாகக் கூறப்பட்டது.
பாலின் கோ குவேக் சூ, 49, என்னும் மாதின் இடது கையில் அதே ஆயுதத்தால் அவர் தாக்கியதாகவும் தெரியவந்தது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள முஹிபுல்லா, மனநலக் கழகத்தில் இருவார காலத்திற்கு அனுமதிக்கப்படுவார். அங்கு அவரது மனநலம் கண்காணிக்கப்படும்.
மீண்டும் மார்ச் 30ஆம் தேதி அவர் நீதிமன்றத்திற்கு வரவேண்டும்.
குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் உள்ள புளோக் 59 ஸ்ட்ராத்மோர் அவென்யூவில் நடைபெற்ற சம்பவம் குறித்து திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் தங்களுக்கு ஏராளமான அழைப்புகள் வந்ததாக காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
காயமடைந்த ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இலேசான காயம் என்பதால் மாது, மருத்துவமனை செல்லவில்லை.

