சிங்கப்பூரின் ஆகப் பெரிய தாவரப் புரதச் சத்து ஆலை

சிங்கப்பூரின் ஆகப் பெரிய தாவரப் புரதச் சத்து ஆலை

2 mins read
3a20355f-c2e1-483a-8572-9a77ef7142ad
மாதிரி முட்டையால் உருவாக்கப்படும் உணவைப் பார்வையிடும் அமைச்சர் லோ யென் லிங் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ -

'தாவ் சுவான்' எனும் பிர­பல உணவு வகை­யில் பயன்­ப­டுத்­தப்­படும் பயற்றம் பருப்புதான் சிங்­கப்­பூ­ரில் அமை­ய­வி­ருக்­கும் புதிய தாவரப் புரதச் சத்து ஆலை­யில் பர­வ­லா­கப் பயன்­ப­டுத்­தப்­படும். இதை முக்கிய உணவுப் பொருளாகக்கொண்டே மாற்று புரதச் சத்து உள்ள உணவு வகைகள் தயாரிக்கப்படும் என்று ஆலையை நடத்தவுள்ள 'ஈட் ஜஸ்ட்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்­னும் ஈராண்­டு­களில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய தாவரப் புரதச் சத்து ஆலையான இது கட்­டப்படும். பய­னி­யர் வட்­டா­ரத்­தில் 2.7 ஹெக்­டர் பரப்­ப­ளவு கொண்ட நிலத்­தில் இந்த ஆலை கட்­டப்­படும். ஆண்­டு­தோ­றும் ஆயி­ரம் டன்­கள் கணக்­கி­லான தாவ­ரப் பொருள்­களி­லி­ருந்து வரும் புரதச் சத்து ஆலை­யில் தயா­ரா­கும். இதன் மூலம் சிங்­கப்­பூ­ரின் உண­வுப் பாது­காப்பு வலு­வ­டை­யும்.

அமெ­ரிக்­கா­வின் கலி­ஃபோர்­னியா மாநி­லத்­தைச் சேர்ந்த புதி­தா­கத் தொடங்­கப்­பட்ட 'ஈ்ட் ஜஸ்ட்' நிறு­வ­னம் ஆலையை நடத்­தும். இந்த ஆலையை அமைக்க 'ஈட் ஜஸ்ட்', 'புரோட்­டேரா இன்­வெஸ்ட்­மென்ட் பார்ட்­னர்ஸ் ஏஷியா' ஆகிய இரு நிறு­வ­னங்­களும் இணைந்து 120 மில்லயின் அமெரிக்க டாலரை முதலீடு செய்கின்றன.

'புரோட்­டேரா இன்­வெஸ்ட்­மென்ட் பார்ட்­னர்ஸ் ஏஷியா', உணவு, வேளாண் வர்த்தகத் துறையில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தும் நிறுவனம்.

'ஈட் ஜஸ்ட்' ஆலைக்­கான நில அகழ்வு நிகழ்ச்சி நேற்று நடை­பெற்றது. அதில் மாதிரி முட்­டை­களால் தயா­ரான 'ஈட் ஜஸ்ட்'டின் உண­வுப் பொருள்­களை செய்­தி­யாளர்­கள், முத­லீட்­டா­ளர்­கள், அர­சாங்­கத் தலை­வர்­கள் ஆகி­யோர் உட்­கொண்­டனர்.

நிகழ்ச்­சி­யில் வர்த்­தக, தொழில் அமைச்­சர் லோ யென் லிங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டார். மாதிரி முட்­டை­க­ளின் சுவை உண்­மை­யான முட்­டை­க­ளின் சுவை­யைப் போலவே இருந்­த­தா­கத் திரு­வாட்டி லோ கூறி­னார். அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளுக்­கான விநி­யோ­கச் சங்­கி­லி­யின் மீள்­தி­றனை வளர்க்க இந்தப் புதிய ஆலை பங்­காற்­றும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

"உள்­ளூ­ரில் பொருள்­க­ளைத் தயா­ரிக்க எடுக்­கப்­படும் முயற்­சி­களுக்கு இது பேரு­த­வி­யாக அமை­யும். பல்­வேறு இடங்­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்து வரு­வது, தேசிய அள­வி­லான கையி­ருப்பு ஆகிய ஏற்­பா­டு­க­ளு­டன் சேர்ந்து இந்த முயற்சியும் கைகொ­டுக்­கும்," என்று திரு­வாட்டி சுட்­டி­னார்.

2030ஆம் ஆண்­டுக்­குள் தனக்­குத் தேவை­யான ஊட்­டச்­சத்­தில் 30 விழுக்­காட்டை உள்­ளூ­ரில் தயா­ரிப்­பது சிங்­கப்­பூ­ரின் இலக்கு.