இவ்வாண்டின் 'கோப்27' பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு எகிப்து தலைமை தாங்குகிறது. அதற்குப் பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூரின் ஆதரவைத் தெரிவித்துள்ளார். எகிப்தின் வெளியுறவு அமைச்சர் சாமே ஷுக்ரி சிங்கப்பூருக்கு வந்தபோது திரு லீ தமது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டார்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 'கோப்27' பருவநிலை மாநாடு வரும் நவம்பர் மாதம் நடைபெறஉள்ளது. அதில் கலந்துகொள்ள எகிப்து அதிபர் அப்டெல் ஃபட்டா அல்-சிசி தம்மை அழைத்திருப்பதற்குத் திரு லீ நன்றி தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கும் எகிப்துக்கும் இடையே நீண்டகாலமாக இருந்துவரும் உறவையும் பிரதமர் மறுவுறுதிப்படுத்திக்கொண்டார்.
திரு ஷுக்ரி கடந்த இரு நாள்களுக்கு சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார். தமது ஆசிய பயணத்தின் ஓர் அங்கமாக அவர் சிங்கப்பூருக்கு வருகை தந்தார்.
நேற்று இஸ்தானா மாளிகையில் பிரதமர் லீ அவரைச் சந்தித்தார்.

