பருவநிலை மாற்ற மாநாட்டுக்கு எகிப்து தலைமை தாங்குகிறது; ஆதரவை மறுவுறுதிப்படுத்திய பிரதமர் லீ சியன் லூங்

பருவநிலை மாற்ற மாநாட்டுக்கு எகிப்து தலைமை தாங்குகிறது; ஆதரவை மறுவுறுதிப்படுத்திய பிரதமர் லீ சியன் லூங்

1 mins read
6baa3b1f-6722-40f1-8426-cbf7f91916c9
பிரதமர் லீ சியன் லூங் (வலது), எகிப்து வெளியுறவு அமைச்சர் சாமே ஷுக்ரி. படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

இவ்­வாண்­டின் 'கோப்27' பரு­வ­நிலை மாற்ற மாநாட்­டிற்கு எகிப்து தலைமை தாங்­கு­கிறது. அதற்­குப் பிர­த­மர் லீ சியன் லூங் சிங்­கப்­பூரின் ஆத­ர­வைத் தெரி­வித்­துள்­ளார். எகிப்­தின் வெளி­யு­றவு அமைச்­சர் சாமே ஷுக்ரி சிங்­கப்­பூ­ருக்கு வந்தபோது திரு லீ தமது ஆத­ர­வைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.

ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் 'கோப்27' பரு­வ­நிலை மாநாடு வரும் நவம்­பர் மாதம் நடை­பெ­ற­உள்­ளது. அதில் கலந்­து­கொள்ள எகிப்து அதி­பர் அப்­டெல் ஃபட்டா அல்-சிசி தம்மை அழைத்­தி­ருப்­ப­தற்­குத் திரு லீ நன்றி தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் எகிப்­துக்­கும் இடையே நீண்­ட­கா­ல­மாக இருந்­து­வ­ரும் உற­வை­யும் பிர­த­மர் மறு­வு­று­திப்­ப­டுத்­திக்­கொண்­டார்.

திரு ஷுக்ரி கடந்த இரு நாள்களுக்கு சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்­கொண்­டார். தமது ஆசிய பய­ணத்­தின் ஓர் அங்­க­மாக அவர் சிங்­கப்­பூ­ருக்கு வருகை தந்­தார்.

நேற்று இஸ்தானா மாளிகையில் பிரதமர் லீ அவரைச் சந்தித்தார்.