சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸீ யூங் காங் அடுத்த மாதம் முதல் தேதியன்று பதவி விலகவுள்ளார். இவர் மூன்று தவணைக் காலம் இந்தப் பொறுப்பை வகித்துள்ளார்.
தற்போது வாரியத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக விளங்கும் கோ பெங் கெங் தற்காலிகமாக தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை வகிப்பார். அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் வரை கோ பெங் கெங் இந்தப் பதவியை வகிப்பார் என்று சுகாதார மேம்பாட்டு வாரியமும் சுகாதார அமைச்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
திரு ஸீ, ஒன்பது ஆண்டுகளாக தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருள்களில் சுகாதாரக் குறிப்புகளை முத்திரையிடுவது பரவலாகப் பின்பற்றப்பட்டது. மேலும், நோய்கள் வராமல் தடுக்க உதவும் 'ஸ்கிரீன் ஃபோர் லைஃப்' எனும் வாழ்நாளுக்கான பரிசோதனை திட்டமும் அதிகமாகப் பின்பற்றப்பட்டது.

