தண்ணீர் தினத்தில் நீல ஒளியில் மிளிரவிருக்கும் சிங்கப்பூரின் 56 கட்டங்கள்

தண்ணீர் தினத்தில் நீல ஒளியில் மிளிரவிருக்கும் சிங்கப்பூரின் 56 கட்டங்கள்

1 mins read
67cde75b-0f37-459c-aa45-7a1150167163
-

தண்­ணீ­ருக்­கான நீடித்த நிலைத்­தன்மை தொடர்­பில் சிங்­கப்­பூ­ரின் உறு­தி­யான கடப்­பாட்டை வெளிப்­படுத்­தும் வண்­ணம் இங்­குள்ள முக்­கி­யக் கட்­ட­டங்­கள் மார்ச் 19 முதல் முதல் மார்ச் 22 வரை நீல நிற விளக்­கு­க­ளால் அலங்­க­ரிக்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன.

பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் "நீல­மாய் மாறும் நக­ரம்" எனும் முயற்­சி­யின்­கீழ் 56 முக்­கி­யக் கட்­ட­டங்­களில் நீல வண்ண விளக்­கு­கள் ஒளி உமி­ழும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முந்­தைய ஆண்­டு­களில் இந்­தத் திட்­டத்­தில் இணைந்த இயோன் ஆர்ச்­சர்ட், கலை­அ­றி­வி­யல் அரும்­பொ­ரு­ள­கம் போன்­ற­வற்­று­டன் இந்த ஆண்டு 16 புதிய கட்­ட­டங்­கள் இணை­ய­வி­ருக்­கின்­றன. கேபி­டோல் சிங்­கப்­பூர், ஃபுல்லர்ட்­டன் ஹோட்­டல், மரினா பே நிதி நிலை­யம் போன்­றவை அவற்­றுள் அடங்­கும்.

இந்த முறை சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழ­கம், தெமா­செக் பல­து­றைத் தொழில்­நுட்­பக் கல்­லூரி உள்­ளிட்ட சில உயர்­கல்வி நிலை­யங்­களும் இதில் இணை­ய­வி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் தினத்தை அனுசரிக்கும் விதமான இந்த முயற்சியில் மொத்தம் 460 பங்காளிகள் கைகோத்து, தண்ணீரைச் சேமிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கின்றன.