ஒரு வயதுச் சிறுவனை முதுகில் தாக்கிய சிசு பராமரிப்பு ஆசிரியருக்கு 10 மாதச் சிறை

ஒரு வயதுச் சிறுவனை முதுகில் தாக்கிய சிசு பராமரிப்பு ஆசிரியருக்கு 10 மாதச் சிறை

3 mins read
65b83a07-d7a6-442e-a281-959639c9564f
-

ஒரு பாலர்­பள்­ளி­யில் சிசுப் பரா­ம­ரிப்பு ஆசி­ரி­யர் ஒரு வயது சிறு­வனின் முது­கில் கடு­மை­யான காயம் ஏற்­படும் வரை தாக்­கி­யுள்­ளார். முது­கில் ஏற்­பட்ட தழும்­பு­கள் பற்றி கேட்­ட­தற்கு அந்­தக் குழந்­தைக்கு மிகை உணர்வுள்ள தோல் உள்­ள­தா­கப் பொய் கூறி மறைத்­துள்­ளார்.

வலி தாங்க முடி­யா­மல் அந்­தக் குழந்தை தொடர்ந்து 30 நிமி­டங்­களுக்கு அழு­தா­லும், அந்த மாது அதைப் புறக்­க­ணித்­துள்­ளார்.

இதற்­காக அந்த 55 வயது சிங்­கப்­பூர் ஆசி­ரி­ய­ருக்கு நேற்று 10 மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. குழந்­தை­யின் அடை­யா­ளத்­தைப் பாது­காக்­கும் பொருட்டு, அந்த ஆசி­ரி­ய­ரின் பெயரை வெளி­யிட நீதி­மன்­றம் தடை விதித்­தது.

குழந்­தை­கள், இளை­யர் சட்­டத்­தின்­கீழ் குழந்­தையை மோச­மாக நடத்­திய குற்­றத்தை அவர் முன்பு ஒப்­புக்­கொண்­டார். இதே­போன்ற மற்­றொரு குற்­றச்­சாட்டு தண்­டனை விதிப்­பின்­போது கருத்­தில் கொள்­ளப்­பட்­டது.

இப்­போது அந்­தப் பாலர்­பள்­ளி­யில் பணி­யில் இல்­லாத அந்த ஆசி­ரி­ய­ருக்கு, 18 மாதங்­கள் வரை­யிலான குழந்­தை­க­ளைப் பரா­ம­ரிக்­கும் பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தது என்று நீதி­மன்­றத்­தில் கூறப்­பட்­டது.

குழந்­தை­க­ளுக்கு உண­வ­ளித்­தல், 'நாப்­கின்'களை மாற்­று­தல், கல்வி விளை­யாட்டு நட­வ­டிக்­கை­க­ளுக்கு வழி­காட்­டு­தல் ஆகி­யவை அவ­ரது கட­மை­களில் அடங்­கும்.

டிசம்­பர் 24, 2019 அன்று, மதி­யம் 12.30 மணி முதல் 1 மணி வரை, ஆசி­ரி­யர் அந்­தச் சிறு­வ­னி­டம் முரட்­டுத்­த­ன­மாக பல­முறை நடந்­து­கொண்­டுள்­ளார்.

குழந்­தை­யின் முது­கில் குறைந்­தது 22 முறை அடித்­தது, அவ­ரது முகத்தை ஒரு சிறிய தலை­ய­ணை­யைக் கொண்டு அறைந்­தது, கன்­னங்­களில் அறைந்­தது, தரை­யில் அவரை கடு­மை­யாக அடிப்­ப­தற்கு முன் அவ­ரது கைகளை வலுக்­கட்­டா­ய­மாக வேக­மாக அசைத்­தது ஆகி­யவை அந்த மாது புரிந்த குற்­றச்­செ­யல்­க­ளா­கும்.

சிறிது நேரம் கழித்து, சிறு­வனின் முது­கில் ஒரு பெரிய சிவப்பு திட்டு உரு­வா­வதை ஆசி­ரி­யர் கவ­னித்­தார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிவப்பு திட்டு நீல நிற­மாக மாறி­யது.

சிறு­வ­னின் தாயார் தன் மக­னின் காயங்­க­ளைக் கவ­னிப்­பார் என்­பதை உணர்ந்த அவர், தாயா­ரின் சந்­தே­கத்­தைத் திசை திருப்ப முற்­பட்­டார்.

சிறு­வ­னின் தாயார் மகனை அழைக்க பாலர்­பள்­ளிக்கு வரு­வ­தற்கு முன் அவ­ருக்கு குறுஞ்­செய்தி ஒன்றை ஆசி­ரி­யர் அனுப்­பி­னார்.

சிறு­வ­னைத் தூங்க வைக்க அவ­னது முது­கில் சற்று வேக­மாகத் தட்­டி­ய­தால் அங்கு தோல் அழற்சி ஏற்­பட்­ட­தற்காக அந்த ஆசி­ரி­யர் தாயா­ரி­டம் மன்­னிப்புக் கேட்­டுக்­கொண்­டார்.

அதற்கு அடுத்த நாள் அந்­தத் தாயார் தன் மகனை கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­றார். அங்கு சிறு­வனின் முது­கில் ஏற்­பட்­டுள்ள கடு­மை­யான காயங்­கள் விபத்­தால் ஏற்­பட்­ட­தில்லை என்று மருத்­து­வர் கூறி­னார். சிறு­வ­னின் மருத்­து­வ­மனைச் செல­வான $139.10 தொகை யைப் பாலர்­பள்ளி செலுத்தி விட்­டது.

அந்­தத் தாயார் பின்­னர் பாலர்­பள்­ளி­யின் கண்­கா­ணிப்பு கேம­ரா­வில் பதி­வான காட்­சி­க­ளைப் பார்த்­த­போது, ​​தனது குழந்தை கடு­மை­யான காயங்­க­ளுக்கு உட்­படுத்­தப்­பட்­டுள்­ளது தெரிய வந்­தது.

அதன் தொடர்­பில் தாயார் டிசம்­பர் 31, 2019 அன்று மாவல் துறை யிடம் புகார் செய்­தார்.

ஓராண்டு சிறைத்­தண்­ட­னையை கோரிய, துணை அரசு வழக்­க­றி­ஞர் ஜெரல்ட் டான், பாதிக்­கப்­பட்­ட­வர் மிக­வும் சிறி­ய­வர் என்­றும் உடல் ரீதி­யாக தன்னை தற்­காத்­துக் கொள்­ளவோ தாக்­கு­தல் சம்­ப­வம் பற்றி வெளி­யில் சொல்­லவோ முடி­யா­த­வர் என்­றார்.

ஒரு குழந்­தை­யைக் கொடு­மைப்­ப­டுத்­தி­னால், குற்­றம் புரிந்­த­வ­ருக்கு நான்கு ஆண்­டு­கள் வரை சிறை­யும் $4,000 வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.