பட்டம் பெறுவதா, வேலையில் சேர்வதா என முடிவெடுப்பதில் இளம் சிங்கப்பூரர்களுக்கு குழப்பம்

பட்டம் பெறுவதா, வேலையில் சேர்வதா என முடிவெடுப்பதில் இளம் சிங்கப்பூரர்களுக்கு குழப்பம்

3 mins read
60e09f8b-1e0d-4353-826d-03aff8ef4e4d
-

பெரி­ய­வர்­கள் கல்வி கற்பதற்கான இடங்­களை அதி­க­ரிப்­பது, கல்வி பற்­றிய மன­நி­லையை மாற்றுவது, ஆகியன சிங்­கப்­பூ­ரர்­கள் புதிய வேலை­க­ளுக்­கான திறன்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கும் ஏற்­கெ­னவே உள்ள வேலை­களை நிரப்­பு­வ­தற்­கும் ஒரு வழியை உரு­வாக்­கும் என்று நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

வேலை செய்­யும் பெரி­ய­வர்­களுக்கு இங்­குள்ள பல்­க­லைக் கழ­கங்­களில் கழி­வு­டன் கூடிய கல்­விக் கட்­ட­ணத்­தில் இடங்­க­ளைப் பெறு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் இப்­போது அதி­கம் உள்­ளன.

இம்­மா­தம் 7ஆம் தேதி, கல்வி அமைச்­சர் சான் சுன் சிங், கல்­வி­யில் அதிக வாழ்­நாள் கூட்­டுப் பங்­கேற்பு விகி­தத்­தின் சாத்­தி­யத்­தைக் கல்வி அமைச்சு ஆரா­யும் என்று அறி­வித்­தார்.

அப்­படி என்­றால், வேலை செய்­யும் அதி­க­மான பெரியவர்­கள் அர­சாங்­கத்­தின் நிதி­யு­தவி பெறும் பட்­டப்­ப­டிப்பு திட்­டங்­களில் இடம்­பெற அனு­ம­திப்­பது குறித்து கல்வி அமைச்சு பரி­சீ­லித்து வரு­கிறது என்று திரு சான் தனது அமைச்­சின் பட்­ஜெட்டை நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பித்தபோது கூறி­னார்.

கல்வி அமைச்­சின் வாழ்­நாள் கூட்­டுப் பங்­கேற்பு விகி­தத்திற்கு மாறும் இத்­திட்­டம் வாழ்­நாள் கற்­றலை ஊக்­கு­விப்பதற்­கான சரி­யான திசை­யில் செல்­லும் ஒரு வழி­யா­கும் என்று சிங்­கப்­பூர் மனி­த­வ­ளக் கழ­கத் தலை­வர் லோ பெக் கெம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னார்.

பெரி­ய­வர்­க­ளுக்­கான கழி­வு­டன் கூடிய கல்­விக் கட்­டண இடங்­களை அதி­க­ரிப்­பது, வர்த்­த­கச் சான்­றி­தழ் போன்ற பிற வழி­க­ளு­டன், ஊழி­யர்­கள் தங்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்வதற்­கான கட்­ட­மைக்­கப்­பட்ட பாதையை உரு­வாக்­கும் என்­றார் திரு­வாட்டி லோ.

இதற்­கி­டையே, இளைய சிங்­கப்­பூ­ரர்­கள் பிற்­கா­லத்­தில் பல்­க­லைக்­க­ழ­கப் பட்­டங்­க­ளைப் பெறு­வதற்­கான வாய்ப்­பு­கள் அதி­க­மாக இருந்­தா­லும், படிப்­ப­தைத் தொட­ர­லாமா அல்­லது வேலை­யில் சேர­லாமா என்­ப­தில் அவர்­கள் இன்­னும் குழப்­ப­நி­லை­யில் உள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

"பட்­ட­தா­ரி­க­ளுக்கு நல்ல சம்­ப­ளம் ஈட்­டும் வேலை கிடைப்­பது சுல­ப­மல்ல. பட்­டப்­ப­டிப்­புக்­குச் செலுத்த வேண்­டிய கட்டணம் குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் குடும்­பத்­தி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்­குச் சவா­லாக இருக்­கும். முத­லில் வேலைச் செய்­து­விட்டு பிற­கு பட்­டப்­ப­டிப்­பைத் தொடங்­கி­ய­தால் என்­னால் சேமிக்­க­வும் வேலை அனு­ப­வத்­தைப் பெற­வும் முடிந்­தது," என்­றார் சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயி­லும் காவல்­துறை அதி­காரி த.சுந்­த­ரே­சன், 26.

"முத­லில் உங்­கள் பட்­டப்­ப­டிப்பை முடிப்­பது நல்­லது என்று நான் நினைக்­கி­றேன். எந்த வேலை செய்­தா­லும், அந்­தத் துறை­யில் நாம் கைதேர்ந்­த­வ­ராக விளங்­க­வேண்­டும். அதற்­குத் தேவை­யான அறி­வை­யும் ஆற்­ற­லை­யும் பெற பட்­டப்­ப­டிப்பு வழி­வ­குக்­கும் என்று நான் நம்­பு­கி­றேன்," என்­றார் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கணக்­கி­யல் பயி­லும் முக­மது ஃபட்­சில், 22.

"காவல் துறை, ராணு­வம் போன்ற சில துறை­களில் பணி­பு­ரிய பட்­டம் பெற்­றி­ருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இப்­ப­டிப்­பட்ட துறை­யில் வேலை செய்ய விரும்­பு­ப­வர்­கள் முத­லில் வேலை செய்து, அனு­ப­வத்தை அதி­க­ரித்­துக்­கொண்டு, பிற­கு பட்­டப்­ப­டிப்பு பயில செல்­ல­லாம். இது அவர்­க­ளைக் குறு­கிய கால­கட்­டத்­தில் நல்ல நிலைக்­குக் கொண்டு செல்­லும். ஆனால், மருத்­து­வம், சட்­டம், பொறி­யி­யல் ஆகிய துறை­களில் பணி­யாற்ற குறைந்­த­பட்­சம் பட்­டப்­ப­டிப்­பா­வது படித்­தி­ருக்­க­வேண்­டும். இத்­து­றை­களில் பணி­யாற்ற விரும்­பு­வோர் முத­லில் பட்­டப்­ப­டிப்பு பயில்­வதை தவிர வேறு வழி இல்லை," என்­றார் முழு­நேர தேசிய சேவை­யா­ளர் லின்­ஃபொர்ட் டேனி­யல், 22.

"பட்­டப்­ப­டிப்பு மட்­டும் சில துறை­களில் நாம் எதிர்­பார்க்­கும் மதிப்­பைக் கொடுப்­ப­தில்லை. அதற்கு வேலை அனு­ப­வம் இன்­றி­ய­மை­யா­த­தா­கும். எல்லா துறை­யும் ஒன்­றல்ல. ஒரு­வ­ரின் நிதி நிலைமை, பணி­புரிய விரும்­பும் துறை, லட்­சி­யம் என அனைத்தையும் பொறுத்து அவர்­களின் கல்விப் பாதை அமை­யும். எனவே இத்­திட்­டத்தை அமல்­படுத்­து­வது நன்­மை­ய­ளிக்­கும் என நான் நம்­பு­கி­றேன்," என்று கூறி­னார் பொதுத் தொடர்­புத் துறை முது­கலை பட்­ட­தாரி நிஷ்­மன் நாத் நாயர், 28.

"பல­து­றைத் தொழிற்­கல்­லூரி முடித்­த­வர்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­கள் உள்­ளன. மேல்­நிலை முடித்த மாண­வர்­கள் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்ள வேண்­டும். இத்­திட்­டம் பல­து­றைக் கல்வி முடித்­த­வர்­க­ளுக்­கும் முத­லில் வேலை அனு­ப­வத்­தைப் பெற விரும்­பு­ப­வர்­க­ளுக்­கும் வழி­வ­குக்­கிறது," என்­றார் சுத்­தி­கரிப்பு செயல்­முறை தொழில்­நுட்ப வல்­லு­நர் ஷா.ஷாஜ­ஹான், 27.

கூடுதல் செய்தி:

கவின்விழி கதிரொளி