ஓமிக்ரான் உச்சம் முடிந்தது; இன்னமும் அகலாத சுமை

ஓமிக்ரான் உச்சம் முடிந்தது; இன்னமும் அகலாத சுமை

2 mins read
fff1be03-952c-4965-a53c-a05c9ba399dd
அவசர சிகிச்சை நாடி வரும் கொரோனா தொற்று அல்லாத இதர நோயாளி களில் பெரும் பாலான வர்கள் முற்றிய நோயுடன் கூடியவர் களாக இருக்கிறார் கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அமைச்சர்: இதர நோயாளிகளால் மருத்துவமனைகளுக்கு நெருக்கடி குறையவில்லை

ஓமிக்­ரான் தொற்று உச்­சம் நிச்­ச­ய­மாக முடிந்­து­விட்­டது. இருந்­தா­லும் கொவிட்-19 சாராத இதர நோயாளிகள் கார­ண­மாக மருத்துவ­ ம­னை­க­ளுக்கு சுமை இன்­ன­மும் அக­ல­வில்லை என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 சூழல் பற்­றிய புதிய தக­வல்­களை அவர் வெளி­யிட்­டார். அன்­றாட தொற்று எண்­ணிக்­கை­க­ளைப் பார்க்­கை­யில் ஓமிக்­ரான் தொற்று உச்­சத்தை தொட்டு குறை­யத் தொடங்­கி­விட்டது என்­பது தெளி­வா­கத் தெரி­வ­தாக அவர் கூறி­னார்.

வாராந்­திர தொற்று அதி­க­ரிப்பு விகி­த­மும் கிட்­டத்­தட்ட 0.7 ஆக இருப்­பதை அவர் சுட்­டி­னார்.

ஒரு சில நாட்­க­ளுக்கு முன் இந்த அளவு 0.9 ஆக இருந்­தது.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை படிப்­ப­டி­யா­கக் குறைந்து வரு­கிறது.

இருந்­தா­லும்­கூட மருத்­து­வ­மனை­கள் இன்­ன­மும் சுமை­யு­டன்­தான் செயல்­ப­டு­கின்­றன.

கொவிட்-19 சாராத இதர நோயாளி­கள் அதிக எண்­ணிக்­கை­யில் தீவிர சிகிச்சைப் பிரிவை நாடு­வதே இதற்­கான கார­ணம் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

அப்படி நாடுவோரில் பெரும்­பாலா­ன­வர்­கள் முற்­றிய நோய்­களுடன் கூடி­ய­வர்­கள்.

அந்த நோய்­கள் கடந்த இரண்­டாண்­டு­களில் அவர்­க­ளுக்குப் பிரச்­சி­னை­யா­கி­விட்­டன.

கடந்த இரண்டு ஆண்­டு­களில், மருத்­து­வ­ம­னை­கள் கொவிட்-19 நோயா­ளி­கள் மீது அதிக கவ­னம் செலுத்த வேண்­டிய தேவை ஏற்­பட்­டதே இதற்­கான கார­ணம் என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

தீவிர சிகிச்சைப் பிரி­வில் அனு­மதிக்­கப்­ப­டு­வோ­ரில் 90% முதல் 95 விழுக்­காட்­டி­னர் முற்­றிய நோய்­களு­டன் கூடிய அவ­சர கவ­னிப்பு தேவைப்­ப­டக் கூடி­ய­வர்­க­ள்.

இவர்­களில் கிட்­டத்­தட்ட 20 விழுக்­காட்­டி­ன­ருக்கு கொவிட்-19 தொற்­றுக்­கா­க­வும் சிகிச்சை வழங்க வேண்டி இருக்­கிறது. எஞ்­சிய 5% கொவிட்-19 சிறப்பு சிகிச்­சை­க­ளுக்­காக அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்­கள்.

இன்­னும் இரண்டு வாரங்­களில் சூழ்­நிலை மேம்­படும் என்று அமைச்சு நம்­பு­வ­தா­க­வும் திரு ஓங் குறிப்­பிட்­டார். அர­சாங்­கம் அடுத்த கட்­ட­மாக விதி­மு­றை­களைத் தளர்த்­து­வ­தற்குத் திட்­ட­மி­டு­கிறது.

இந்த நிலை­யில், அது வார தொற்று எண்­ணிக்­கை­யை­யும் மருத்து­வ­ம­னை­களில் தீவிர சிகிச்சைப் பிரி­வு நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யை­யும் அணுக்­க­மாக கண்­கா­ணித்து வரு­கிறது என்று அவர் தெரி­வித்­தார்.