மருத்துவமனை வார்டுகளுக்குச் செல்ல ஏப்ரல் 3 வரை தடை

மருத்துவமனை வார்டுகளுக்குச் செல்ல ஏப்ரல் 3 வரை தடை

1 mins read
2709c046-6bb7-43d4-bffc-04a94d6610bf
-

எல்லா மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் பரா­ம­ரிப்பு விடுதிக­ளுக்­கும் பொது­மக்­கள் நேர­டி­யா­கச் செல்­வதற்­கான தடை ஏப்­ரல் 3ஆம் தேதி வரை தொட­ரும் என்று சுகா­தார அமைச்சு அறி­வித்து இருக்­கிறது.

அந்­தத் தடை இம்­மா­தம் 20ஆம் தேதி வரை அம­லில் இருக்கும் என்று முன்­ன­தாக அமைச்சு அறி­வித்து இருந்­தது.

இப்­போது அந்­தத் தடை நீட்­டிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் கடந்த வாரத்­தில் கொவிட்-19 உள்­ளூர் தொற்று படிப்­ப­டி­யாக குறைந்து இருக்­கிறது. இருந்­தா­லும்­கூட மருத்­து­வ­ம­னை­களில் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை குறை­ய­வில்லை.

ஆகை­யி­னால் சுகா­தா­ரப் பரா­மரிப்­புத் துறை ஊழி­யர்­கள் இன்னமும் கணி­ச­மான நெருக்­க­டியை எதிர்­நோக்­கு­கி­றார்­கள்.

ஆகை­யால், மருத்­து­வ­மனை, தாதிமை இல்ல ஊழி­யர்­க­ளின் சுமையைக் குறைக்­கும் முயற்­சி­யாக மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் விடு­தி­களுக்­கும் பொது­மக்­கள் நேர­டி­யாகச் செல்­வ­தற்­கான தடை அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­படும் என்று அமைச்சு அறிக்­கை­யில் தெரி­வித்து உள்­ளது.

இருந்­தா­லும் அசா­தா­ரண நில­வரங்­க­ளைப் பொறுத்­த­வரை, தங்­கள் விருப்பப்படி மருத்­து­வ­ம­னை­களும் விடு­தி­களும் செயல்­ப­ட­லாம்.

அப்­படி அனு­ம­திக்­கப்­படும் வரு­கை­யா­ளர்­கள் நடப்பு விதி­மு­றை­களுக்கு கட்­டுப்­பட்டு நடக்­க­வேண்­டும் என்பது முக்கியமானது.

மருத்­து­வ­ம­னை­களும் விடு­தி­களும் மாற்று தொடர்பு வழி­களில் தொடர்ந்து ஆத­ரவு வழங்­கும் என்­றும் அமைச்சு தெரி­வித்து உள்­ளது.

நோயா­ளி­கள், தாதிமை வாசிகள், உற­வி­னர்­கள், நண்­பர்­கள் அனை­வ­ரும் நில­வ­ரங்­க­ளைப் புரிந்­து­கொண்டு ஒத்­து­ழைப்பு தரும்­படி அமைச்சு கேட்­டுக்­கொண்­டது.

சூழ்­நி­லைக்­கேற்ப அர­சாங்­கம் நில­வ­ரங்­களைப் பரி­சீ­லனை செய்து உரிய நடை­மு­றை­களை அமலாக்கும்.