எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான நியோ கியான் ஹோங் பதவி விலகுகிறார். அவர் அந்தப் பொறுப்பில் நான்கு ஆண்டுகள்தான் இருந்துள்ளார்.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவரான ஜியன் ஹுன் பிங், திரு நியோவிடம் இருந்து எஸ்எம்ஆர்டி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் டெஸ்மண்ட் குவெக் இருந்தார்.
அவரிடம் இருந்து அந்தப் பொறுப்பை 2018 ஆகஸ்ட்டில் திரு நியோ ஏற்றார்.
திரு ஜியன் 2020ல் நிலப் போக்குவரத்து ஆணையத்தில் இருந்து விலகி ஃபேர்பிரைஸ் குழுமத்தின் விநியோகக் கட்டமைப்புத் தொழில்துறையில் பொறுப்பு ஏற்றார். இவர் எஸ்எம்ஆர்டி நிர்வாக சபையில் மே 1ஆம் தேதி சேர்வார். ஆகஸ்ட் 1ஆம் தேதி தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பு ஏற்பார்.
எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று தனது நிறுவன அறிவிப்பை விடுத்தது. அதில் இந்த விவரங்கள் உள்ளன.
பதவி விலகினாலும் திரு நியோ, இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை ஆலோசகராக தொடர்ந்து இருந்து வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.