பெண்டமியர் சந்தை, உணவு நிலையத்தில் நிகழ்ந்த சண்டை
யுடன் தொடர்புடையவர் என்று நம்பப்படும் முதியவர் மீது பொது இடத்தில் ஆயுதம் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
77 வயது இங் ஹுவி ஊ, அரிவாளைக் காட்டி மிரட்டியதாக நம்பப்படுகிறது.
ஆயுதத்தைக் காட்டி மிரட்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று மாலை 6.55 மணி அளவில் பெண்டமியர் சாலையில் இருவர் சண்டை போட்டுக்கொண்டதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
ஆனால் அதிகாரிகள் அங்கு செல்வதற்குள் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் இங் கைது செய்யப்பட்டார்.
இங் அரிவாளைப் பயன்படுத்தி யாரையும் காயப்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு அடுத்த மாதம் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

