தலைவலி போகும் முன்பே திருகுவலி; விவேகமே மருந்து

தலைவலி போகும் முன்பே திருகுவலி; விவேகமே மருந்து

4 mins read
6cbc4813-5cb4-445b-ae9e-b8f0de6a27ef
-

முரசொலி

தலை­வலி போனபிறகு திருகு­வலி வந்­தா­ல் ஓரளவுக்குச் சமா­ளிக்­க­லாம். ஆனால் ஒரே நேரத்தில் இரண்­டும் சேர்ந்து வந்­தால் என்ன பாடு­ப­ட­வேண்­டும் என்­பதை இப்­போது உல­கம் காண்­கிறது.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக கொரோனா படுத்­திய பெரும்­பா­டு­க­ளைச் சமா­ளிக்க நாடுகள் இன்­ன­மும் படாதபாடு­பட்­டுக்­கொண்டு இருக்­கும் நிலை­யில், உக்­ரேனை ரஷ்யா ஆக்­கி­ர­மித்து அடுத்த பிரச்­சி­னை­யைக் கிளப்­பி­விட்டு, ஏற்­கெ­னவே உள்ள சிர­மங்­களை இமா­லய சிரமமாக்கிவிட்டது. அதோடு, எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதைப் போல் சீனாவில் மீண்டும் தொற்று தலைதூக்கிவிட்டது.

கொவிட்-19 தொற்று ஏற்­பட்­ட­தால் பல நாடுகளும் தங்­கள் எல்­லை­களை மூடி­விட்டு தனித்து இருக்க வேண்­டிய சூழல் உருவாகி, உல­கம் முழு­வ­துமே பொருள், சேவை போக்­கு­வ­ரத்து, விநி­யோ­கக்­ கட்டமைப்பு ஆகியவை முடங்­கிப்­போ­னது.

அது கொஞ்சம் கொஞ்ச­மாக மீண்டு வந்­த­போது உக்­ரேன் மீது ரஷ்யா கடந்த பிப்­ர­வரி 24 ஆம் தேதி படை­எ­டுத்துவிட்டது. கொரோனாவில் மக்கள் மாண்டது போதாது என்று உக்­ரே­னில் ரஷ்யா நடத்தும் தாக்­கு­தல்-அதை எதிர்த்து உக்­ரேன் அரங்­கேற்றும் தீவி­ர­மான மோதல் கார­ண­மாக உயிருடற் சேதங்­கள் வேதனை தரும் அள­வுக்கு உள்ளன.

ரஷ்யா அதி­க எண்­ணெய் ஏற்­று­மதி செய்­யும் நாடு. அதோடு மட்­டு­மல்ல, உக்­ரே­னும் ரஷ்­யா­வும் கோதுமை, மக்கா சோளத்தை உல­கின் பல பகுதி­களுக்­கும் ஆக­அ­தி­க­மாக ஏற்­று­மதி செய்­கின்­றன.

உக்­ரே­னில் அடா­வ­டித்­த­னத்­தில் ரஷ்யா இறங்கி இருப்­ப­தற்­குப் பதி­ல­டி­யாக அந்த நாட்­டின் மீது அமெ­ரிக்க, ஐரோப்பா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடு­கள் பல­வும் பல்­வேறு தடை­களை அதிக அளவுக்கு விதித்­துள்ளன.

இத­னால் ரஷ்ய எண்­ணெய் உலக சந்தைக்கு வர இய­லாத சூழல் ஏற்­பட்டு உள்­ளது. அதோடு முக்­கி­ய­மான போக்­கு­வ­ரத்து வழித் தடங்­களும் அடை­பட்­டு­விட்­ட­தால் எண்­ணெய் விலை ஏறி­விட்­டது. எரி­பொ­ருளே பொரு­ளி­ய­லுக்கு மிக முக்­கிய அடைப்­படை என்­ப­தால் இதர விலை­களும் கூடிவிட்­டன. கோதுமை, சோளம் வரத்து தடைபட்­ட­தால் உண­வுப் பொருள் விலை எகி­றி­விட்­டது.

சீனா­வின் புதிய கொரோனா தொற்று நில­வரமும் இதற்கு உர­மாக அமைந்­து­விட்­டது. அங்கு மீண்டும் கிருமி அதி­கம் தலை­காட்­டு­வ­தால் பெரிய அள­வில் முடக்­கத்தை அம­லாக்க வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்டு, செங்­ஷான் போன்ற முக்­கி­ய­மான உற்­பத்தி, ஏற்­று­மதி மையங்­கள் முடங்கிவிட்­ட­ன. விநி­யோ­கக் கட்­ட­மைப்பு மேலும் தடை­பட்­டு­விட்­டது. உற்­பத்­திப் பொருள்களின் வி­லை அதிகரிக்க இந்த நில­வரமும் முக்கிய காரணமாகிவிட்டது.

சிங்­கப்­பூர் உல­கு­டன் அணுக்க தொடர்­பு­க­ளைக் கொண்ட நாடு; உலக சந்­தைகளைச் சார்ந்து இருக்கும் நாடு என்பதால் இந்த வெளித் தாக்­கு­தல்­களில் இருந்து தப்ப முடி­ய­வில்லை.

புற நில­வ­ரங்­க­ளின் பாதக விளை­வு­களை இங்கு ஏற்­கெ­னவே நாம் உண­ரத் தொடங்­கி­விட்­டோம்.

உணவு, பெட்­ரோல், பய­னீட்­டுப் பொருள்­கள் விலை அதி­க­மாகி உள்­ளன. உணவுப் பொருள் இறக்கு­ம­தி­யா­ளர்­கள், உண­வங்­கா­டிக் கடைக்­காரர்­கள், டாக்சி, வாடகை கார் நிறு­வ­னங்­கள், தளவாடப் போக்­கு­வ­ரத்து, சில்­லறை வர்த்­த­கம், உற்­பத்­தித்­துறை நிறு­வ­னங்­கள் எல்­லாம் செய்­வ­த­றி­யாது கையைப் பிசைகின்­றன.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் கடந்த பிப்­ரவ­ரி­யில் கூட்டு அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டன. சிங்­கப்­பூ­ரில் மூலா­தாரப் பண­வீக்­கம்-அதா­வது தனி­யார் போக்கு­வரத்து, குடி­யி­ருப்புச் செல­வு­களை நீக்­கி­விட்டு கணக்­கி­டப்­படும் பண­வீக்­கம்- 2012 செப்­டம்­ப­ருக்கு பிறகு ஆக அதி­க­மாக 2.4 விழுக்­காட்டை தொட்டு­விட்­டது என்று அந்த அறிக்கை கூறி­யது.

கொரோனா தொற்­றைப் பொறுத்­தும் உல­க­ளவில் ஏற்­ப­டக்­கூ­டிய அதிர்ச்சி சம்­ப­வங்­கள் கார­ண­மாகவும் இந்த ஆண்டு நடுப்­ப­குதி வாக்­கில் பண­வீக்­கம் மேலும் கூடி 3 விழுக்­காட்டை எட்­டும் என்­றும் அவை கணித்து இருந்­தன.

இதுபோலவே இப்­போது உக்­ரேன் மீது ரஷ்ய படை­யெ­டுப்பு கார­ண­மா­க­வும் சீனா­வில் மறு­ப­டி­யும் தொற்று தலை­தூக்­கு­வ­தா­லும் பண­வீக்­கம் கூடும் என்­பது ஏறக்குறைய நிச்­ச­ய­மா­கி­விட்­டது.

இது­போன்ற உலக பாதக நில­வ­ரங்­கள் எவ்வளவு காலத்­துக்கு நீடிக்­கும் என்­பது இப்­போ­தைக்கு தெளி­வாகத் தெரி­ய­வில்லை.

இத்­த­கைய ஒரு நிலை­யில், விலை­வாசியை- அதா­வது பண­வீக்­கத்தைச் சமா­ளிக்க சிங்­கப்­பூ­ரர்­களுக்கு அர­சாங்­கம் அளிக்­கும் உத­வி­கள் நிம்­மதி பெரு­மூச்­சு­வி­டும் அள­வுக்கு இருப்பதாகத் தெரிகிறது.

விலை உயர்வு கார­ண­மாக ஏற்­படக்­கூ­டிய பாதிப்பு­களைக் குடும்­பங்­கள் சமா­ளிக்க, புதிய வர­வு­செலவுத் திட்­டத்­தில் கணி­ச­மான அள­விற்குப் பாது­காப்பு ஏற்­பா­டு­கள் உள்ளன. குறிப்­பாக குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளுக்குப் பல திட்­டங்­கள் இருக்­கின்­றன.

மேம்­ப­டுத்­தப்­பட்ட $6.6 பில்­லி­யன் உத்­த­ர­வா­தத் திட்­டம்; மேம்­ப­டுத்­தப்­பட்ட ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டுத் திட்­டம்; $560 மில்­லி­யன் குடும்ப ஆத­ர­வுத் திட்­டம் ஆகியவை, குறைந்த வரு­மான குடும்­பங்­கள் விலை­வாசி உயர்­வைச் சமாளிக்க, சரியான நேரத்தில் தேவை­யான அள­வுக்கு உதவும் என்பது திண்ணம்.

குடும்­பங்­க­ளுக்கு மட்­டு­மின்றி தொழில்­து­றைக்கும் நிறை­வான உதவி கிடைக்க $500 மில்­லி­யன் வேலை, தொழில் ஆத­ர­வுத் திட்­டம் உள்­ளிட்ட பல ஏற்­பாடு­கள் இருக்­கின்­றன.

உணவு, பானத் தொழில்­துறை நிறு­வ­னங்­களுக்கும் சில்­லறை வர்த்­தக நிறு­வ­னங்­களுக்­கும் கூடு­தல் ஆத­ர­வைத் தரும் வகையில் மார்ச் மாதம் 4ஆம் தேதி புதி­தாக $70 மில்­லி­யன் செயல்­திட்­டம் ஒன்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்ளது.

மேற்கொண்டு உதவிகள் தேவைப்பட்டால் அரசு உறுதுணையாக இருக்கும் என்று நம்பலாம்.

சிங்­கப்­பூ­ரில் அடுத்த ஆண்டு பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) கூடு­கிறது. அதைச் சாக்­காக வைத்து அத்­தி­யா­வ­சியப் பொருள்­, சேவை­க­ளின் விலையை அநி­யா­ய­மான முறை­யில் சிலர் உயர்த்தக்­கூ­டும்.

இதி­லி­ருந்து பய­னீட்­டா­ளர்­க­ளைப் பாது­காப்­பதற்­கா­கவே 'கொள்ளை லாபத் தடுப்­புக் குழு' என்று குறிப்­பி­டப்­படும் ஒரு குழு அமைக்­கப்­பட்டு இருக்­கிறது. இப்­போ­தைய சூழ­லில் மிக முக்­கிய பங்­காற்­றும்; வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குப் பாது­காப்­பாக இருக்­கும் என்­ப­தால் அந்தக் குழு மிகப் பொருத்­த­மானதாக, அவ­சி­ய­மானதாகப் பார்க்­கப்­படு­கிறது.

எல்லா புறச் சூழல்களையும் வைத்து கணிக்கையில் அதிகமான விலை உயர்வு தவிர்க்க இய­லா­தது என்­பதை உணர்ந்து, தலை­வ­லி­யோடு சேர்ந்து வந்­துள்ள திரு­கு­வ­லி­யை­யும் சமா­ளிக்க, விவேகமான அணுகு­மு­றையை சிங்­கப்­பூ­ரர்­கள் மருந்­தா­கப் பயன்­ ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.