5,000 மீ. பெருநடையின்போது மயங்கி விழுந்த ஆடவர் மரணம்

5,000 மீ. பெருநடையின்போது மயங்கி விழுந்த ஆடவர் மரணம்

1 mins read
b1a0f774-8fff-4cc6-ab41-5c76d46307b5
-

சிங்­கப்­பூர் திடல்தடச் சங்கம் நேற்று ஏற்­பாடு செய்த அனை­வருக்­கு­மான 5,000 மீட்­டர் பெரு­நடை நிகழ்ச்­சி­யின்­போது மயங்கி விழுந்த 50 வயது ஆட­வர் மர­ண­ம­டைந்­தார்.

பெரு­நடை தொடங்­கி­ய­தும் ஒரு கிலோ மீட்­டர் தூரம் நடந்த நிலை­யில் அவர் தரை­யில் விழுந்­து­விட்­ட­தா­கத் தெரி­கிறது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று குறிப்­பிட்டது. காலாங்­கில் ஹோம் ஆஃப் அத்­ல­டிக்ஸ் தடத்­தில் இருந்த மருத்துவ சேவை­யா­ளர்­கள் அவருக்கு முத­லு­தவி அளித்­த­னர்.

மருத்­துவ வாக­னம் விரைந்து வந்து அவரை மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­றது. டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் அந்த ஆட­வர் மர­ண­ம­டைந்­து­விட்­டார்.

அந்த நிகழ்ச்­சி­யின் தொடக்­கப் பட்­டி­ய­லைப் பார்க்­கும்­போது, நான்கு பேர் பற்­றிய விவ­ரங்­கள் அதில் இருந்­தது.

அவர்­களில் மூவ­ருக்கு 18 வயது. மற்­றொ­ரு­வருக்கு 50 வயது. அந்த ஆட­வரின் பெயர் லிம் பூன் ஹுவாட் என்று இருந்­தது.

தனி­ந­பர் நிகழ்ச்சி ஒன்­றுக்கு ஆயத்­த­மான திடல்­தட விளை­யாட்டு வீரர் ஒரு­வர் இது பற்றி கருத்து கூறி­ய­போது மற்­ற­வர்­களும் தானும் திட­லில் பர­ப­ரப்பு நில­வி­யதைக் காண முடிந்­தது என்­றும் மருத்­துவ ஊழி­யர்­கள் ஒரு தடத்தை நோக்கி ஓடி­ய­தைத் தாங்­கள் பார்த்­த­தா­க­வும் கூறி­னார்.

ஆனால் சொந்த நிகழ்ச்­சி­யில் தங்­கள் கவ­னம் இருந்­த­தால் அங்கு என்ன நடந்­தது என்­பது தங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை என்­றார் அவர்.