இளையர் நலன் பேணும் 'இம்பார்ட்'

1 mins read
098ac6e4-b4f9-412f-b8d2-203133f0e01e
-

இளை­யர்­க­ளின் மேம்­பாட்­டில் கைகொடுக்கும் பொருட்டு நிறு­வப்­பட்­டது 'இம்பார்ட்' என்ற லாப நோக்­க­மற்ற அமைப்பு. சிங்­கப்­பூர் இளை­யர்­க­ளுக்கு வழி­காட்ட முற்­படும் இந்த அமைப்பு இது­வரை முந்­நூற்­றுக்­கும் மேற்­பட்ட இளை­யர்­களுக்கு உத­வி­யுள்­ளது.

"வாழ்­வில் நம்­பிக்கை இழப்­பது என்­பது மிக ஆபத்­தான நிலை. நாளைப் பொழுதைக் கற்­பனை செய்து பார்க்க முடி­யாத நிலை­யில் உள்ள இளை­யர்­கள் ஆபத்­தான முடி­வு­களை எடுக்­கத் துணி­கின்­ற­னர். இழந்த நம்­பிக்­கையை அவர்­களுக்குள் மீண்­டும் ஏற்­ப­டுத்துவது என்­பது மிகக் கடி­ன­மா­னது," என்­றார் இம்­பார்ட் அமைப்­பின் நிறு­வ­னர் நாராஷ் நர­சிம்­மன், 39 (படம்).

இரு­பது ஆண்­டு­க­ளாக இளை­யர்­க­ளைப் பேணும் சமூகப் பணி­யைச் செய்து வந்த திரு நாராஷ், தம்­மு­டைய நண்­ப­ரு­டன் சேர்ந்து இந்த அமைப்பை 2015ஆம் ஆண்­டில் உரு­வாக்­கி­னார்.

'சின்க்' என்ற இளை­யர் மன­ந­லத் திட்­டம் இந்த அமைப்­பின் மூன்று கிளை­களில் ஒன்­றா­கும்.

சக இளை­யர்­க­ளுக்கு உத­வு­வ­தற்­கான பயிற்­சி­களை 'சின்க்' திட்­டத்­தில் இணை­யும் இளை­யர்­க­ளுக்கு வழங்­கு­கிறது இம்­பார்ட்.

மேலும், இளை­யர்­கள் தங்­க­ளது சொந்த மன­ந­லப் பிரச்­சி­னை­களைக் களை­வ­தற்­கான தெளிவை ஏற்­படுத்­த­வும் அந்த அமைப்­பின் திட்­டங்­கள் வழி­காட்­டு­கின்­றன. பாதிக்­கப்­பட்ட இளை­யர்­கள் இல­வ­ச­மாக மன­நல ஆலோ­ச­கர்­களை நாடு­வ­தற்­கும் இம்­பார்ட் உதவுகிறது.

"மன­ந­லம் பற்­றிய உரை­யா­டல்­களில் இளை­யர்­க­ளின் குர­லை­விட அவர்களைச் சுற்­றி­யுள்­ளோ­ரின் குரலே ஓங்­கு­கிறது. தங்­க­ளது கவ­லை­க­ளோடு முன்­வ­ரும் தைரி­யத்­தை­யும் அதை எதிர்­நோக்­கும் உறு­தி­யை­யும் அளிக்க நாங்­கள் முற்­படு­றோம்," என்­றார் திரு நாராஷ்.