சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பெருங்குடல் சோதனைக்காக ஐந்து மாதங்களாக காத்திருந்த நோயாளி

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பெருங்குடல் சோதனைக்காக ஐந்து மாதங்களாக காத்திருந்த நோயாளி

2 mins read
fa7ca27e-b694-4f93-a8cd-dc35482505ba
சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பெருங்குடல் சோதனை செய்ய திருமதி டானுக்கு ஐந்து மாதம் காத்திருக்க நேரிட்டது.கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் பெருங்­கு­டல் (மலக்­கு­டல்) சோத­னைக்­காக ஐந்து மாதங்­கள் காத்­தி­ருக்க நேரிட்­ட­தால் நோயாளி ஒரு­வர், தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று உடல் நலத்­தைக் காப்­பாற்­றி­யுள்­ளார்.

திரு­மதி டான், 73 (உண்மைப் பெயர் அல்ல) மலத்­தில் ரத்­தம் காணப்­பட்­ட­தால் கடந்த ஆண்டு ஜன­வ­ரி­யில் அர­சாங்க பல­துறை மருந்­த­கத்­துக்­குச் சென்­றுள்­ளார். மலச்­சிக்­க­லா­லும் பாதிக்­கப்­பட்­டி­ருந்த அவ­ருக்கு செரிக்க உத­வும் மருந்­து­கள் பல­னிக்­க­வில்லை.

பெருங்­கு­டல் புற்­று­நோய் ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்ற அச்­சத்­தில் அவ­ருக்கு பெருங்­கு­டல் சோதனை நடத்த சிங்­கப்­பூர் பொது மருத்­துவ மனைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டார். ஆனால் ஐந்து மாதங்­க­ளுக்­குப் பிறகு ஜூன் மாதத்­தில் பெருங்­கு­டல் சோதனை செய்ய அவ­ருக்கு தேதி வழங்­கப்­பட்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு தெரி­வித்­தது.

புற்­று­நோய்க்கு அஞ்­சிய அவர் அவ்­வ­ளவு மாதங்­கள் காத்­தி­ருக்க விரும்­ப­வில்லை. உட­ன­டி­யாக மவுண்ட் எலி­ச­பெத் நொவீனா சிறப்பு சிகிச்சை நிலை­யத்­தில் உள்ள கல்­லீ­ரல், இரைப்பை, குடல் நோய் நிபு­ண­ரான மெஸ்­மண்ட் வாய் என்­ப­வரை அவர் அணு­கி­னார்.

ஒரு வாரத்­திற்­குள் பிப்­ர­வரி 3ஆம் தேதி அவ­ருக்கு பெருங் குடல் சோதனை செய்­யப்­பட்­டது.

அவர் பயந்­த­ப­டியே அவ­ருக்கு புற்­று­நோய் இருப்­பதை சோதனை முடி­வு­கள் காட்­டின. பெருங்­கு­டல் புற்­று­நோய் முற்­றி­யி­ருந்­தது மட்­டு­மல்­லா­மல் கல்­லீ­ர­லுக்­கும் பர­வி­யி­ருந்­தது.

பொது மருத்­து­வ­னை­யில் சலுகைக் கட்­ட­ணத்­தில் சிகிச்சை பெறு­வ­தற்கு சோதனை முடிவு களு­டன் பல­துறை மருந்­த­கத்­துக்­குத் திரும்­பிச் செல்­லு­மாறு டாக்­டர் வாய் அவ­ரி­டம் யோசனை கூறி­னார்.

புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்ட இதர நோயா­ளி­க­ளை­யும் அவ்­வாறு பொது மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி­யி­ருப்­ப­தா­க­வும் அங்கு அவர்­ களுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­ட­தா­க­வும் மருத்­து­வர் தெரி­வித்­தார்.

ஆனால் ஒற்­றை­ய­ரான திரு­மதி டானுக்கு அடிப்­படை மெடி­ஷீல்ட் லைஃப் (காப்­பு­றுதி) மட்­டுமே உள்­ளது. அவ­ருக்கு அந்­தச் சம­யத்­தில் கல்­லீ­ர­லி­லும் கட்டி இருந்­தது.

ஐந்து மாதங்­கள் தாம­தித்­தி­ருந்­தால் மேலும் பல கட்­டி­கள் உரு வாகி­யி­ருக்­கலாம் என்று மருத்­து­வர் வாய் சொன்­னார்.

இந்த நிலை­யில் திரு­மதி டானின் உடன்­பி­றந்­த­வர்­களும் அவர்­க­ளு­டைய பிள்­ளை­களும் திரு­மதி டான் உட­ன­டி­யாக தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற­வும் செல­வு­களை ஏற்­றுக் கொள்­ள­வும் முன்­வந்­த­னர்.

இதை­ய­டுத்து மவுண்ட் ஆல்­வர்­னியா மருத்­து­வ­ம­னை­யில் ஆறு படுக்­கை­க­ளைக் கொண்ட அறை­யில் மலி­வா­ன கட்­ட­ணத்­தில் சிகிச்சை பெற­லாம் என்று மருத்­து­வர் பரிந்­து­ரைத்­தார்.

அதன்­ப­டியே திரு­மதி டானும் சிகிச்சை பெற்­றுக்கொண்­டார். இதற்கு 50,000 வெள்ளி முதல் 60,000 வெள்ளி வரை செல­வா­னது. மெடி­ஷீல்ட் லைஃப் மூலம் ஒரு பகுதி கட்­ட­ணத்தை மட்­டுமே ஈடு­கட்ட முடிந்­தது.

கல்­லீ­ரல், பெருங்­கு­ட­லில் இருந்த கட்­டி­களை சுருங்­கச் செய்­வ­தற்­காக அவ­ருக்கு சில சுற்று 'கீமோ­தெ­ரபி' சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவ­ருக்கு அறுவை சிகிச்­சை­யும் செய்­யப்­பட்­டது. தற்­போது திரு­மதி டான் நல்ல உடல்­நி­லை­யில் உள்­ளார். புற்­று­நோய் பர­வு­வ­தற்­கான அறி­கு­றி­களும் இல்லை.