வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதை ஏற்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிந்துகொண்டு இன்னமும் சிங்கப்பூர் திரும்பாதவர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் நாடு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்லைக் கட்டுப்பாடுகள் அண்மையில் தளர்த்தப்பட்டதை யடுத்து இந்நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சும் வெளியுறவு அைமச்சும் வெளியிட்ட கூட்டு அறிக்கை தெரிவித்தது.
வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் சிங்கப்பூருக்குத் திரும்பி தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் சிங்கப்பூரர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இதன் காரணமாக சிங்கப்பூரில் தடுப்பூசிக்குப் பதிந்துகொள்ளும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அண்மையில் குறைந்து வந்தது என்று அறிக்கை தெரிவித்தது.
வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் முதற்கட்ட தடுப்பூசிகளைப் போட்டிருந்தால் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பாதை வழியாக சிங்கப்பூர் திரும்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவர்கள், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
தடுப்பூசி போடாதவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலமும் ஏழு நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
அது மட்டுமின்றி, பயணிகள் தாங்கள் விரும்பிய இடத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவர்.
தடுப்பூசி பாதை ரத்து செய்யப்பட்ட பிறகு சிங்கப்பூர் திரும்பும் வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப் பூரர்கள், சிங்கப்பூரில் தடுப்பூசி போட விரும்பினால் தனிமைக்காலத்தை முடித்த பிறகு ஏதாவது ஒரு தடுப்பூசி நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிக்கை மேலும் தெரிவித்தது.

