தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்காளித்துவ இணக்கக் குறிப்பு கையொப்பம்

2 mins read
803ac3cb-adfa-47aa-b6be-b9299a77ef9b
இணக்கக் குறிப்பில் கையெழுத்திடும் சிங்கப்பூர் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் (வலது), இந்தோனீசிய அமைச்சர் லுஹுட் பின்சார் பஞ்சாய்த்தான் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரும் இந்­தோ­னீ­சி­யா­வும் பரு­வ­நிலை மாற்­றம் தொடர்­பான இலக்­கு­களை எட்­டும் முயற்­சி­களில் கைகோத்­துச் செயல்­பட இணங்­கி­யுள்­ளன. அதற்­கான புரிந்­து­ணர்­வுக் குறிப்பு நேற்று கையெ­ழுத்­தா­னது.

சிங்­கப்­பூ­ரின் மூத்த அமைச்­ச­ரும் தேசி­யப் பாது­காப்­புக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான டியோ சீ ஹியன், இந்­தோ­னீ­சி­யா­வின் கடல்­துறை மற்­றும் முத­லீட்டு விவ­கா­ரங்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் லுஹுட் பின்­சார் பஞ்சாய்த்தான் இரு­வ­ரும் அந்த உடன்­ப­டிக்­கை­யில் கையொப்­ப­மிட்­ட­னர்.

தூய்­மை­யான தொழில்­நுட்­பத்­துக்­கான ஆய்வு, நிலத்­தி­லும், நீரி­லும் காணப்­படும் வெவ்­வேறு சுற்­றுச்­சூ­ழல் கட்­ட­மைப்­பு­கள் தொடர்­பான முன்­னோ­டித் திட்­டங்­கள் ஆகி­ய­வற்­றில் இரு நாடு­களும் இணைந்து செயல்­பட அது வழி­வ­குக்­கும். பாரிஸ் பரு­வ­நிலை ஒப்­பந்­தத்­தின்­கீழ் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைப்­ப­தற்­கான திட்­டங்­கள் குறித்து இரு­த­ரப்­பும் அவற்­றின் அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ள­வும் அது வகை­செய்­யும்.

புதிய உடன்­ப­டிக்­கை­யின்­கீழ் சிங்­கப்­பூ­ரும் இந்­தோ­னீ­சி­யா­வும் நான்கு முக்­கி­யத் துறை­களில் ஒத்­து­ழைக்­க­வி­ருக்­கின்­றன. கரிய விலை மற்­றும் சந்தை, இயற்கை அடிப்­ப­டை­யி­லான தீர்­வு­கள் மற்­றும் சுற்­றுச்­சூ­ழல் சார்ந்த அணு­கு­முறை, தூய்­மை­யான தொழில்­நுட்­ப­மும் தீர்­வு­களும் மற்­றும் பசுமை நிதி ஆகி­யவை அவை.

இந்த ஆண்டு ஜன­வ­ரி­யில் இரு நாட்­டுத் தலை­வர்­க­ளுக்கு இடை­யில் நடந்த சந்­திப்­பைத் தொடர்ந்து இந்­தப் புதிய ஒப்­பந்­தம் எட்­டப்­பட்­டுள்­ளது. இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில், முன்­னோ­டித் திட்­டங்­கள் உள்­ளிட்ட செய­லாக்­கத் திட்­டம், ஆய்வு ஒத்­து­ழைப்பு, தொழில்­நுட்­பப் பரி­மாற்­றம் ஆகி­யவை உரு­வாக்­கப்­படும்.

இந்த வட்­டா­ரத்­தில் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைக்­க­வல்ல புதுப்­பிக்­கக்­கூ­டிய எரி­சக்­தித் தீர்­வு­கள் குறித்­தும் சிங்­கப்­பூ­ரும் இந்­தோ­னீ­சி­யா­வும் ஆரா­யும்.

நேற்று கையெ­ழுத்­தான புரிந்­து­ணர்­வுக் குறிப்பு, புதிய மேம்­பாட்டு வாய்ப்­பு­க­ளை­யும், வேலை­க­ளை­யும் உரு­வாக்­கும் என்று மூத்த அமைச்­சர் டியோ கூறி­னார். இந்த இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பு முயற்­சி­யில் அர­சாங்க அமைப்­பு­கள், தனி­யார் துறை, கல்வி நிலை­யங்­கள் ஆகி­யவை ஈடு­ப­டுத்­தப்­படும் என்­றார் அவர்.

ஜி-20 கட்­ட­மைப்­பின்­கீழ், இந்­தோ­னீ­சியா நிதிக் கூட்­ட­ணியை உரு­வாக்­கும் என்று அந்­நாட்டு அமைச்­சர் லுஹூட் தெரி­வித்­தார். பல­த­ரப்பு அனைத்­து­லக நிலை­ய­மான அது, பரு­வ­நிலை மாற்­றம் தொடர்­பான திட்­டங்­க­ளை­யும் நிதி­யை­யும் ஒருங்­கி­ணைத்து ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் நீடித்த நிலைத்­தன்மை இலக்­கு­களை அடை­வ­தற்­குப் பணி­யாற்­றும் என்­றார் அவர்.

அத்­து­டன், இந்­தோ­னீ­சி­யா­வின் உண­வுப் பேட்­டைத் திட்­டத்­தில் இணைந்­து­கொள்­ளும்­படி சிங்­கப்­பூ­ருக்கு அவர் அழைப்­பு­வி­டுத்­துள்­ளார். இப்­போ­துள்ள விளை­நி­லங்­களில் உற்­பத்­தியை மேம்­ப­டுத்­து­வ­தில் கவ­னம்­ செ­லுத்­தும் அந்­தத் திட்­டம், உண­வுப் பாது­காப்பை அதி­க­ரிக்க புதிய வேளாண்­நி­லங்­களை உரு­வாக்­க­வும் முனை­கிறது. புதிய உடன்­ப­டிக்­கை­யின்­கீழ், கரி­யத்­துக்­கான விலை நிர்­ண­யிப்பு தொடர்­பி­லும் இரு நாடு­களும் கூட்­டா­கப் பணி­யாற்­றும்.

பருவநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை எட்ட சிங்கப்பூர்-இந்தோனீசியா கூட்டு முயற்சி