தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடி வலை விரிக்கும் போலி சொத்து முகவர்கள்; காவல்துறை எச்சரிக்கை

2 mins read
555b157a-c28d-457d-8a96-5bebb6035590
-

சொத்து முக­வர்­க­ளா­கப் பாசாங்கு செய்து மோச­டிக்­கா­ரர்­கள் சிலர் பணம் பறித்து வரு­வ­தா­கப் பொது­மக்­க­ளுக்­குக் காவல்­து­றை­யி­னர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

அவர்­களை நம்பி இது­வரை குறைந்­தது 144 பேர் ஏமாந்­து­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இந்த மோசடி கார­ண­மாக ஏறத்­தாழ $190,000 இழப்பு ஏற்­பட்­டுள்­ளது.

வீடு­கள் வாட­கைக்கு விடப்­

ப­டு­கின்­றன எனப் பொய் கூறி போலி விளம்­ப­ரங்­களை மோச­டிக்­கா­ரர்­கள் இணை­யப்­பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்­கின்­ற­னர்.

விளம்­ப­ரத்­தைக் கிளிக் செய்­

ப­வர்­க­ளுக்கு +65 எனத் தொடங்­கும் எண்­ணி­லி­ருந்து வாட்ஸ்­அப் செய்தி அனுப்­பப்­படும்.

உண்­மை­யான சொத்து முக­வர்­க­ளின் படங்­கள், பெயர், உரி­மம் எண் ஆகி­ய­வற்றை மோச­டிக்­

கா­ரர்­கள் பயன்­ப­டுத்­து­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தத் தக­வல்­களை வீட்டு வாடகை விளம்­ப­ரங்­க­ளி­லி­ருந்து மோச­டிக்­கா­ரர்­கள் பெறு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது

வாட­கைக்கு வீடு தேடு­வோர் வீட்­டைச் சென்று பார்ப்­ப­தற்கு முன்பு முன்­ப­ணம் செலுத்த வேண்­டும் என்­றும் அப்­ப­ணம் திருப்­பிக் கொடுக்­கப்­படும் என்றும் மோச­டிக்­கா­ரர்­கள் தெரி­விப்­ப­தாக காவல்­து­றை­யி­னர் கூறி­னர்.

உதா­ர­ணத்­துக்கு, பிர­தான படுக்­கை­யறை ஒன்று வாட­கைக்கு விடப்­ப­டு­வ­தா­க­வும் அதைச் சென்று பார்க்க $300 முன்­ப­ணம் செலுத்த வேண்­டும் என்றும் மோச­டிக்­கா­ரர் தெரி­வித்­தி­ருந்­ததை காவல்­து­றை­யி­னர் சுட்­டி­னர்.

பணத்தை அனுப்ப வங்­கிக் கணக்கு அல்­லது கைபேசி எண்ணை மோச­டிக்­கா­ரர்­கள் அனுப்பி­வைத்­த­னர்.

பணம் கைக்கு வந்­த­தும் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் தொடர்­பு­கொள்­வதை மோச­டிக்­கா­ரர்­கள் நிறுத்­திக்­கொண்­ட­னர். அப்­போ­து­தான் தாங்கள் ஏமாந்து­விட்­டோம் என்று பலர் உணர்ந்­த­னர். அதி­கா­ர­பூர்­வ­மற்ற தளங்­களில் சொத்­து­கள் குறித்து செய்­யப்­படும் விளம்­ப­ரங்­களை நம்ப வேண்­டாம் என்று காவல்­துறை கேட்­டுக்­கொண்­டுள்­ளது. விளம்­ப­ரத்­தில் இடம்­பெ­றும் தொடர்பு எண் குறித்து சொத்து முக­வர்­க­ளுக்­கான மன்­றத்­தி­டம் சரி­பார்த்து உறுதி செய்­து­கொள்­ள­லாம் என்று ஆலோ­சனை வழங்­கப்­ப­டு­கிறது.

அத்­து­டன் +65 எனத் தொடங்­கும் எண்­ணி­லி­ருந்து கிடைக்­கும் அழைப்­பு­கள், வாட்ஸ்­அப் செய்­தி­களை நம்ப வேண்­டாம் என்று பொது­மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

+65 எனத் தொடங்­கும் எண்­ணி­லி­ருந்து அழைப்பு கிடைத்­தால் அது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­கிறது என்று பொது­மக்­கள் தெரிந்து கொள்ள வேண்­டும் என அதி­காரி ­கள் தெரி­வித்­த­னர்.

இதற்­கி­டையே, வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து ரொக்­கம் பெற சொத்து முக­வர்­க­ளுக்கு அனு­மதி இல்லை என்று வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது. அது­மட்­டு­மல்­லாது, முன்­பின் அறி­மு­கம் இல்­லா­த­வர்­க­ளி­டம் பணம் அனுப்­பு­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என்று காவல்­துறை கூறி­யது. இத்­த­கைய மோச­டி­கள் குறித்து புகார் செய்ய விரும்­பு­வோர் 1800-255-0000 எனும் எண்­ணு­டன் தொடர்­பு­கொள்­ள­லாம். அல்­லது இணை­யம் மூலம் புகார் செய்­ய­லாம்.