கிருமிப் பரவல் அபாயத்தை ஏற்படுத்திய ஆடவர்

கிருமிப் பரவல் அபாயத்தை ஏற்படுத்திய ஆடவர்

2 mins read
1beb71b7-0cfe-4858-942a-03ca946b7c1d
-

கொவிட்-19 கிரு­மித்­தொற்று தொடர்­பாக இரு­முறை மருத்­துவ விடுப்பு கொடுக்­கப்­பட்­டும் வீட்­டில் இருக்­கா­மல், ஆட­வர் ஒரு­வர் செங்­காங் பொது மருத்­து­வ­

ம­னைக்கு வேலைக்­குச் சென்­ற­தாக நம்­பப்­ப­டு­கிறது

தொற்­று­நோய்­கள் சட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூ­ர­ரான 34 வயது நூர் அலிஃப் அப்­துல் தலிப் குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கு­கி­றார்.

விதி­மீ­ற­லின்­போது நூர் ஒப்­பந்­ததாரருக்­காக வேலை செய்­த­தாக செங்­காங் பொது மருத்­து­வ­மனை தெரி­வித்­தது.

"நூரின் ஒப்­பந்­தத்தை அவ­ரது முத­லாளி கடந்த ஆண்டு ரத்து செய்­தார்.

"விதி­மு­றையை மீறிய நூருக்கு எதி­ராக அவ­ரது முத­லாளி நட­வ­டிக்கை எடுத்­தார். அது­கு­றித்து செங்­காங் பொது மருத்­து­வ­ம­னைக்­குத் தொடர்பு இல்லை," என்று மருத்­து­வ­மனை கூறி­யது.

ஒப்­பந்­ததாரர் பற்­றி­யும் விதி­மீ­ற­லின்­போது நூர் செய்­து­கொண்­டி­ருந்த பணி பற்­றி­யும் மருத்­து­வ­மனை தக­வல் வெளி­யி­ட­வில்லை.

கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் 18ஆம் தேதி­யன்று இரண்டு வெவ்­வேறு மருந்­த­கங்­க­ளுக்கு நூர் சென்­ற­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­வித்­தன.

உட்­லண்ட்ஸ், செங்­காங் ஆகிய வட்­டா­ரங்­களில் உள்ள மருந்­த­கங்­க­ளுக்கு நூர் சென்­றார்.

அவ­ருக்கு கொவிட்-19 அறி­கு­றி­கள் இருப்­பது தெரி­ய­வந்­தது. இரு மருந்­த­கங்­களும் அவ­ருக்கு மருத்­துவ விடுப்பு வழங்­கின.

விதி­மு­றை­யின்­படி அடுத்த மூன்று நாள்­க­ளுக்கு, அதாவது ஜன­வரி 20ஆம் தேதி வரை நூர் வீட்­டி­லேயே இருக்க வேண்­டும் என்­றும் கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு அவர் அனுப்­பப்­ப­டு­வார் என்­றும் அந்த இரு மருத்­து­வர்­களில் ஒரு­வர் நூரி­டம் தெரி­வித்­தார். அடுத்த ஐந்து நாள்­க­ளுக்கு, அதாவது ஜன­வரி 22ஆம் தேதி­வரை வீட்­டி­லேயே இருக்க வேண்­டும் என்று இன்­னொரு மருத்­து­வர் நூரி­டம் தெரி­வித்­தி­ருந்­தார்.

கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் 18ஆம் தேதி பிற்­ப­கல் 12.40 மணி அள­வில் செங்­காங் வட்­டா­ரத்­தில் உள்ள மருந்­த­கத்­தி­லி­ருந்து நூர் சர்­கீட் சாலை­யில் உள்ள தமது வீட்­டுக்­குச் செல்­லா­மல் செங்­காங் பொது மருத்­து­வ­ம­னைக்கு வேலைக்­குச் சென்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அவ்­வாறு செய்­த­தன் மூலம் தம்­மி­ட­மி­ருந்து மற்­ற­வர்­க­ளுக்கு கொவிட்-19 கிருமி பர­வும் அபா­யத்தை நூர் ஏற்­ப­டுத்­தி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த வழக்கு அடுத்த மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.