கிளார்க் கீ வட்டாரத்தில் கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக மேலும் நால்வர் மீது குற்றம் சுமத்தப்படும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று தெரிவித்தது.
புத்தாண்டுக்கு முதல் நாளன்று கிளார்க் கீ வட்டாரத்தில் 19 வயதுக்கும் 22 வயதுக்கும் இடைப்பட்ட இந்த நால்வரும் விதி
முறைக்கு உட்பட்டு நடக்கவில்லை என்று நம்பப்படுகிறது.
இதுதொடர்பான மேலும் மூவருக்குத் தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிளார்க் கீ வட்டாரத்தில் நிகழ்ந்த புத்தாண்டு ஒன்றுகூடலின்போது கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறையை மீறியதற்காக 14 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது அல்லது சுமத்தப்பட இருக்கிறது.
குற்றம் சுமத்தப்பட்ட ஆடவர்கள் சிலர் முறையாக முகக்கவசம் அணியவில்லை. சிலர் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை.

