சம்பள உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 99,000க்கு மேற்பட்ட சிங்கப்பூர் முதலாளிகள் $840 மில்லியன் மதிப்புள்ள உதவித்தொகையைப் பெறவுள்ளனர்.
இம்மாதம் இறுதிக்குள் இந்த இறுதிதொகை வழங்கீட்டை அவர்கள் பெறுவர்.
சிங்கப்பூர் ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பளம் கொடுக்கும் முதலாளிகளின் செலவுகளை ஈடுகட்ட அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அடுத்தக்கட்ட வழங்குதொகை மூலம் 2021, 2020, 2019ஆம் ஆண்டுகளில் ஊழியர்களுக்கு அளித்த சம்பள உயர்வில் 15 விழுக்காட்டை அரசாங்கம் இணைத் தொகையாக வழங்கும். அதிகரித்து வரும் சம்பள கட்டணங்களைச் சமாளிக்க இத்தொகை உதவும்.
இந்தத் தொகை, 5,000 வெள்ளி வரை சம்பளம் ஈட்டும் 780,000க்கும் அதிகமான சிங்கப்பூரர்களுக்கு முதலாளிகள் வழங்கிய சம்பள உயர்வுக்கு ஈடானதாகும்.
இதன் மூலம் 99,000 மேற்பட்ட முதலாளிகள் பயனடைவர் என்று நிதி அமைச்சும், உள்நாட்டு வருவாய் ஆணையமும் தெரிவித்தன.
இந்த உதவித் திட்டத்திற்குத் தகுதிபெற முதலாளிகள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
அவர்களுக்கு வழங்கப்படும் தொகை குறித்த விவரங்கள் அடங்கிய கடிதங்களை இம்மாத இறுதிக்குள் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.


