தேசியத் தின அணிவகுப்பு 2022 மரினா பே மிதக்கும் மேடையில் நடைபெறும்

இவ்வாண்டு தேசியத் தின அணிவகுப்பு மீண்டும் மரினா பே மிதக்கும் மேடையில் நடைபெறும்.

மிதக்கும் மேடைக்குப் பதில் என்எஸ் சதுக்கம் என்ற ஒரு புதிய நிரந்தர இடத்தைக் கட்டும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால, அணிவகுப்பு அங்கு நடக்கும்.

இது குறித்த தகவல்களைத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

தொற்று சூழ்நிலையால் என்எஸ் சதுக்கக் கட்டுமானப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், மிதக்கும் மேடையில் இறுதியாக ஒரு முறை தேசியத் தின அணிவகுப்பு இடம்பெறும் என்று அவர் பதிவிட்டிருந்தார். நிலம், ஆகாயம், நீர் ஆகிய அம்சங்களையொட்டிய படைப்புகளைக் காண தாம் ஆவலாக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னதாக என்எஸ் சதுக்கம் 2025ஆம் ஆண்டுக்குற் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொவிட்-19 சூழ்நிலையால் கட்டுமானப் பணிகள் தாமதமாகியுள்ளன. கட்டுமானப் பணிகள் குறித்த மேல் தகவல்கள் கூடியவிரையில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!