இவ்வாண்டு தேசியத் தின அணிவகுப்பு மீண்டும் மரினா பே மிதக்கும் மேடையில் நடைபெறும்.
மிதக்கும் மேடைக்குப் பதில் என்எஸ் சதுக்கம் என்ற ஒரு புதிய நிரந்தர இடத்தைக் கட்டும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால, அணிவகுப்பு அங்கு நடக்கும்.
இது குறித்த தகவல்களைத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
தொற்று சூழ்நிலையால் என்எஸ் சதுக்கக் கட்டுமானப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், மிதக்கும் மேடையில் இறுதியாக ஒரு முறை தேசியத் தின அணிவகுப்பு இடம்பெறும் என்று அவர் பதிவிட்டிருந்தார். நிலம், ஆகாயம், நீர் ஆகிய அம்சங்களையொட்டிய படைப்புகளைக் காண தாம் ஆவலாக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னதாக என்எஸ் சதுக்கம் 2025ஆம் ஆண்டுக்குற் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொவிட்-19 சூழ்நிலையால் கட்டுமானப் பணிகள் தாமதமாகியுள்ளன. கட்டுமானப் பணிகள் குறித்த மேல் தகவல்கள் கூடியவிரையில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.