'ஊழியர்கள், எரிசக்தியை அதிகம் சார்ந்திருக்காமல் இருந்தால் வலுவடையலாம்'

'ஊழியர்கள், எரிசக்தியை அதிகம் சார்ந்திருக்காமல் இருந்தால் வலுவடையலாம்'

2 mins read
2d49c2e4-8a10-4909-bdc9-f0cbdfc1345c
கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர் லாரன்ஸ் வோங்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஊழி­யர்­கள் மற்­றும் எரி­சக்­தியை அதி­கம் சார்ந்­தி­ருக்­கா­மல் இருக்க உள்­ளூர் நிறு­வ­னங்­களை உரு­மாற்­றம் செய்­தால் அவை மேலும் வலு­வ­டை­யும் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

ஊழி­யர் மற்­றும் எரி­சக்தி

தட்­டுப்­பா­டு­கள் சிங்­கப்­பூர் பொரு­ளி­யலை நிரந்­த­ர­மா­கப் பாதிக்­கும் அம்­சங்­க­ளாக இருக்­கக்­கூ­டும் என்­றார் அவர். சிங்­கப்­பூர் வட்­டார வர்த்­த­கக் கருத்­த­ரங்­கில்

அமைச்­சர் வோங் கலந்­து­கொண்டு பேசி­னார்.

இந்த நான்கு நாள் உச்­ச­நிலை மாநாடு சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாடு மையத்­தில் நடை­பெற்று வரு­கிறது. சிங்­கப்­பூர் வர்த்­த­கச் சம்­மே­ள­ன­மும் எம்பி சிங்­கப்­பூர் நிறு­வ­ன­மும் இணைந்து நடத்­தும் இந்தக் கருத்­த­ரங்கு நாளை மறு­நாள் நிறை­வ­டை­கிறது.

வர்த்­த­கங்­கள் எதிர்­நோக்­கும் சவால்­க­ளைப் பற்றி அர­சாங்­கத்­துக்கு நன்கு தெரி­யும் என்று திரு வோங் குறிப்­பிட்­டார்.

கொள்கை மாற்­றங்­கள் வேண்டு ­மென்றே படிப்­ப­டி­யாக அறி­மு­கப்­

ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார். மாற்­றங்­களை ஏற்று அவற்­றுக்கு ஏற்ப நடந்­து­கொள்ள நிற­வ­னங்­களுக்கு இது போதிய அவகாசம் தரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், ஊழி­யர் மற்­றும் எரி­சக்தி தட்­டுப்­பா­டு­க­ளைத் தவிர்க்க முடி­யாது என்­றார்

அமைச்­சர் வோங்.

எனவே இந்த யதார்த்­தத்தை ஏற்­றுக்­கொண்டு அதன்­படி நடந்­து ­கொள்­வது புத்­தி­சா­லித்­த­னம் என்று அவர் கூறி­னார்.

வர்த்­தக உரு­மாற்­றம் செய்ய வர்த்­த­கங்­க­ளுக்கு உத­வும் வகை­யில் பல திட்­டங்­கள் அறி­மு­கப்

­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதை அவர் சுட்­டி­னார். ஆனால் இத்­திட்­டங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்கை எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட குறை­வாக இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

இந்த எண்­ணிக்கை இவ்­வாண்டு அதி­க­ரித்­தால் நன்று என்று திரு வோங் தெரி­வித்­தார்.

இன்­றைய சூழ­லில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் பிரச்­சி­னை­க­ளுக்­கு உட­ன­டி­யாக தீர்வு காண்­ப­தில் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் அதிக அக்­கறை காட்­டு­வதை திரு வோங் சுட்­டி­னார்.

உதா­ர­ணத்­துக்கு, ஊழி­யர் பற்­றாக்­குறை நிறு­வ­னங்­களை வெகு­வா­கப் பாதித்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

நிறு­வ­னங்­கள் எதிர்­நோக்­கும் இந்­தச் சவால்­கள் பற்றி அர­சாங்­கம் நன்கு அறிந்துவைத்திருப்பதாக் திரு வோங் தெரிவித்தார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக சிங்­கப்­பூ­ரின் அனைத்­து­லக எல்­லை­கள் இன்­னும் முழு­மை­யா­கத் திறக்­கப்­ப­ட­வில்லை என்­றும் இதன் கார­ண­மாக ஊழி­யர் பற்­றாக்­கு­றையை நிறு­வ­னங்­கள் எதிர்­நோக்­கு­வ­தாகவும் அவர் தெரி­வித்­தார்.

ஆனால் இந்த நிலை

தற்­கா­லி­க­மா­னது என்­றார் அவர். சிங்­கப்­பூர் கொவிட்-19 பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரு­கிறது என்­றும் நாட்­டின் அனைத்­துலக எல்­லை­கள் கூடிய விரை­வில் திறக்­கப்­படும் என்­றும் திரு வோங் தெரி­வித்­தார். அவ்­வாறு நடந்­தால் எஸ் பாஸ், வேலை நிய­மன அட்டை, வைத்­தி­ருக்­கும் ஊழி­யர்­க­ளு­டன் மலே­சிய ஊழி­யர்­க­ளை­யும் உள்­ளூர் நிறுவ­னங்­கள் எளி­தில் வேலை­யில் அமர்த்­த­லாம் என அவர் கூறி­னார்.