'மீள்திறன்மிக்க சூழலை சிங்கப்பூர் வளர்த்துக்கொள்ள வேண்டும்'

'மீள்திறன்மிக்க சூழலை சிங்கப்பூர் வளர்த்துக்கொள்ள வேண்டும்'

1 mins read
d8e6c657-1643-4e28-a309-82e8461662b0
-

இக்­கா­ல­கட்­டத்­தில் உல­க­ளா­விய நிலை­யில் அடிக்­கடி பல அதிர்ச்சி அளிக்­கும் சம்­ப­வங்­கள் நிகழ்­வ­தால் கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்­குப் பிந்­திய நாள்­களில் பொரு­ளி­யல், நிதி­நிலை பாதிப்­பு­கள் வழக்­க­மா­ன­ஒன்றாக இருக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக துணைப்

பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­துள்­ளார்.

எனவே, இந்­தச் சவாலை எதிர்­கொள்ள மீள்­தி­றன்­மிக்க சூழலை சிங்­கப்­பூர் வளர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்­றார் அவர்.

அதிர்ச்­சி­க­ளைச் சமா­ளிக்க அர­சாங்­கம் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ள பொரு­ளி­யல் உரு­மாற்­றங்­கள் கைகொ­டுத்­தி­ருப்­பதை திரு ஹெங் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரின் தொழில்­துறை உரு­மாற்­றுத் திட்­டங்­கள் தொழில் து­றை­க­ளுக்கு வலு­வான அடித்­த­ளத்தை அமைத்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

இத்­திட்­டங்­கள் 2016ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் கூறிய திரு ஹெங், 2016ஆம் ஆண்­டுக்­கும் 2019ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் உற்­பத்­தித்­தி­றன் வளர்ச்சி ஒவ்­வோர் ஆண்­டும் 2.7 விழுக்­காடு வளர்ச்சி கண்­ட­தா­கக் கூறி­னார்.

கொவிட்-19 பாதிப்பு இருந்­தும் இந்த நிலை தொடர்­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

2019-2021 காலகட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் இவ்விகிதம் 3.9 விழுக்காடாகப் பதிவானதாக கருத்தரங்கில் பேசியபோது திரு ஹெங் கூறினார்.