குழந்தையின் மரணம் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டு; விசாரணை நடத்தும் என்யுஎச்

குழந்தையின் மரணம் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டு; விசாரணை நடத்தும் என்யுஎச்

2 mins read
a4943f0f-4803-4945-8a4a-937dd146a96b
-

தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­

ம­னை­யின் (என்­யு­எச்) அவ­ச­ர­கால மருத்­து­வப் பிரி­வில் தமது நிறை­மாத கர்ப்­பிணி மனை­விக்கு கிட்­டத்­தட்ட இரண்டு மணி நேரத்­துக்கு சிகிச்சை அளிக்­கா­மல் அப்­ப­டியே வைத்­தி­ருந்­த­தா­க­வும் அத­னால் தமது குழந்தை இறந்­து­விட்­ட­தா­க­வும் ஆட­வர் ஒரு­வர் குற்­றம் சுமத்­தி­யுள்­ளார்.

இது­கு­றித்து தேசிய பல்­க­லைக்­

க­ழக மருத்­து­வ­மனை விசா­ரணை நடத்­து­கிறது.

இம்­மா­தம் 15ஆம் தேதி­யன்று ஆம்­பு­லன்ஸ் மூலம் தமது மனைவி என்­யு­எச் மருத்­து­வ­ம­னையை அடைந்­த­தாக அந்த ஆட­வர் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டார்.

அவ­ருக்கு அதிக அள­வில்

ரத்­தக் கசிவு ஏற்­பட்­ட­தாக அந்த ஆட­வர் தெரி­வித்­தார்.

இருப்­பி­னும், தமது மனை­விக்கு சிகிச்சை அளிக்­கப்­ப­ட­வில்லை என்று அவர் கூறி­னார்.

இந்த விவ­கா­ரம் குறித்து விசா­ரணை நடத்­து­வ­தாக என்­யு­எச் மருத்­து­வ­மனை தம்­மி­டம் தெரி­வித்­தி­ருப்­ப­தாக அந்த 37 வயது பொறியாளர் நேற்று ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டார்.

இது­கு­றித்து மேலும் தக­வல் பெற ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி ­யா­ளர்­கள் அவ­ரு­டன் தொடர்பு­ கொள்ள முயன்­றது. ஆனால் அவ­ரு­டன் தொடர்­பு­கொள்ள முடி­யா­மல் போனது.

இந்த ஃபேஸ்புக் பதிவு பற்றி தனக்­குத் தெரி­யும் என்­றும்

துய­ரில் ஆழ்ந்­துள்ள குடும்­பத்­துக்கு ஆத­ரவு வழங்க அத­னு­டன் தொடர்பு­ கொண்­டி­ருப்­ப­தா­க­வும் என்­யு­எச் மருத்­து­வ­மனை கூறி­யது.

உண்­மை­யில் என்ன நடந்­தது என்று தெரி­யா­மல் புர­ளி­க­ளைப் பரப்ப வேண்­டாம் என அது பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டது.

தமக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருந்­த­தால் மனைவி­ யு­டன் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல முடி­யாமல் போனதாக என்று ஷின்­மின் நாளி­த­ழி­டம் மருத்­து­வ­மனை மீது குற்­றம் சுமத்­தி­யுள்ள அந்த ஆட­வர் தெரி­வித்­தார்.

இரண்டு மணி நேரம் கழித்து, மகப்­பேறு பிரி­வுக்­குத் தமது மனைவி அனுப்­பப்­பட்­ட­தா­க­வும் அதை­ய­டுத்து, அவ­ரைப்

பரி­சோ­தித்­துப் பார்த்த மருத்­து­வர்­களும் தாதி­ய­ரும் குழந்தை இறந்து ­விட்­டது என்று சொன்­ன­தா­க­வும் அந்த ஆட­வர் தெரி­வித்­தார்.

நிறைய ரத்தம் இழந்துவிட்ட தமது மனைவிக்கு மயக்கமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இறந்த குழந்­தை­யின் உடல் மண்­டாய் தக­னச்­சா­லை­யில் எரி­யூட்­டப்­பட்­டது. தமக்­கும் தமது மனை­விக்­கும் ஏற்­கெ­னவே இரண்டு மகன்­கள் இருப்­ப­தாக ஆட­வர் தெரி­வித்­தார்.

ஒரு மக­னுக்கு ஏழு வயது. இன்­னொரு மக­னுக்கு இரண்டு வயது.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் தமது மனை­விக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தா­க­வும் அத­னைத் தொடர்ந்து தமது இரு மகன்­களும் நோய்­வாய்ப்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.