கொவிட்-19 விதிமீறல்: மேலும் நால்வர் மீது குற்றச்சாட்டு

கொவிட்-19 விதிமீறல்: மேலும் நால்வர் மீது குற்றச்சாட்டு

1 mins read
b812b993-9526-4787-8b19-c4f95489e0c5
-

கிளார்க் கீ வட்­டா­ரத்­தில் புத்­தாண்டு ஒன்­று­கூ­ட­லின்­போது கொவிட்-19 பாது­காப்பு விதி­

மு­றை­களை மீறி­ய­தாக மேலும் நால்­வர் மீது குற்­றம் சுமத்­தப்­

பட்­டுள்­ளது.

விதி­மு­றைக்கு உட்­பட்டு நடந்து­கொள்­ளத் தவ­றி­ய­தாக லீ ஹெர்ன் சிங், வர்­கீஸ் டிவின், ஆடம் அப்­துல்லா, அசி­டிக் சுரானி ஆகிய நால்­வர் மீது குற்­றச்­சாட்டு பதி­வா­கி­யுள்­ளது. இவர்­கள் நால்­

வ­ரும் 19 வய­துக்­கும் 30 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

குறைந்­தது ஒரு மீட்­டர் பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­கத் தவ­றி­ய­தா­க­வும் முகக்­க­வ­சம் அணி­யா­மல் இருந்­த­தா­க­வும் வர்­கீஸ், ஆடம், அசி­டிக் ஆகி­யோர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­கத் தவ­றி­ய­தா­க­வும் ஐவ­ருக்­கும் அதி­க­மா­னோ­ரு­டன் ஒன்­று­கூ­டி­ய­தா­க­வும் லீ மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது. அடுத்த மாதம் 19ஆம் தேதி­யன்று லீ மீண்­டும் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்.

வர்­கீஸ் அடுத்த மாதம் 12ஆம் தேதி­யி­லும் ஆடம் அடுத்த மாதம் 19ஆம் தேதி­யி­லும் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வர்.

அடுத்த மாதம் 6ஆம் தேதி நடை­பெ­றும் வழக்­குக்கு முந்­திய கலந்­து­ரை­யா­ட­லில் அசி­டிக்

முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்.

இந்த நால்­வ­ரையும் சேர்த்து கிளார்க் கீ வட்­டார புத்­தாண்டு ஒன்­று­கூ­டல் தொடர்­பாக இது­வரை 14 பேர் மீது குற்­றம்

சாட்­டப்­பட்­டுள்­ள­தாக நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.