தூய்மையான எரிசக்தியை அதிகம் பெறத் திட்டம்

தூய்மையான எரிசக்தியை அதிகம் பெறத் திட்டம்

1 mins read
7bbc2a25-18a9-4e51-b55a-e061d1cf467d
-

சிங்­கப்­பூ­ரின் ஏறத்­தாழ 40 விழுக்­காடு கரிம வெளி­யேற்­றத்­துக்கு அதன் எரி­சக்தி துறை கார­ண­மாக இருக்­கிறது. ஆனால் தூய்மையான எரி­சக்­தியை கூடு­தலாக இறக்­கு­மதி செய்­வ­தன் மூலம் 2050ஆம் ஆண்­டுக்­குள் நாடு கரிம வெளி­யேற்­றம் முற்­றி­லும் இல்­லாத நிலையை எட்­ட­லாம் என்று புதி­தாக வெளி­யி­டப்­பட்­டுள்ள எரி­சக்தி 2050 குழு அறிக்கை தெரி­வித்­துள்­ளது. இந்த அறிக்­கையை எரி­சக்தி சந்தை ஆணை­யம் வெளி­யிட்­டது.

சிங்­கப்­பூ­ரின் எரி­சக்தி பாது­காப்­புக்­கும் கட்­டுப்­ப­டி­யான விலைக்­கும் எவ்­வித பாதிப்­பும் ஏற்­ப­டா­மல் கரிம வெயேற்­றம் அறவே இல்­லாத நிலையை எட்­ட­லாம் என்று ஆணை­யம் கூறி­யது.

வட்­டார எரி­சக்தி கட்­ட­மைப்­பு ­க­ளி­ட­மி­ருந்து தூய்மையான எரி­சக்­தியை கூடு­தலாக இறக்கு­மதி செய்­வது, 'கிளீன் பர்­னிங் ஹைட்­ரோ­ஜன்' அணு­கு­மு­றைக்­குத் தேவை­யான உள்­கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்­து­வது போன்ற

பரிந்­து­ரை­களை அறிக்கை முன்­வைத்­துள்­ளது.

தற்­போது இயற்கை எரி­வா­யு­வைப் பயன்­ப­டுத்தி சிங்­கப்­பூ­ரில் பெரும்­பா­லான எரி­சக்தி தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. இதன் விளை­வாக கரிம வெளி­யேற்­றம் ஏற்­ப­டு­கிறது. பூமி­யின் வெப்­ப­நிலை அதி­க­ரிப்­புக்கு இது பங்­க­ளிக்­கும்.