பிரிட்டனில் விடுமுறைக்குச் சென்றிருந்தபோது தனது மனைவியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிங்கப்பூர் ஆடவர், நோக்கமில்லாக் கொலைக்குத் தான் காரணமாக இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
50 வயது ஃபாங் சூங் ஹெர்ட், மார்ச் 18ஆம் தேதி பிரிட்டனில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்நோக்கினார். அப்போது, தன் மனைவியான 51 வயது பெக் யிங் லிங்கைத் தான் கொலைசெய்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த அவர், அது மரணம் விளைவித்த நோக்கமில்லாக் கொலை என்று ஒப்புக்கொண்டார்.

