377A பிரி­வு, 'எல்ஜிபிடி' விவகாரங்கள்- அரசாங்கம் கருத்தாய்வு

1 mins read
f84442f7-69db-40dc-80d9-4aea100422df
கருத்தாய்வில் எல்ஜிபிடி சமூகத்தினர் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்) -

குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும் 377ஏ பிரி­வு, 'எல்ஜிபிடி' எனப்படும் ஓரி­னச் சேர்க்­கை­யா­ளர்­கள், இருபாலினர், திருநங்கைகள் குறித்த விவகாரங்கள் ஆகியவற்றை பற்றி ரிச் பிரிவு பொது கருத்தாய்வு நடத்தியுள்ளது. ரிச் என்பது அரசாங்க கருத்தறியும் பிரிவாகும்.

இந்தத் தலைப்பையொட்டி ரிச் பொதுமக்களிடையே கருத்துகள் சேகரிப்பது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது.

ஆண்­களின் ஓரி­னப் பாலி­யல் உற­வைக் குற்­றச்­செ­ய­லாக வகைப்­ப­டுத்­தும் 377ஏ சட்­டப்­பிரிவை சிறந்த முறை­யில் முன்­னெ­டுத்­துச் செல்­வது குறித்து அர­சாங்­கம் கவ­ன­மா­கப் பரி­சீலித்து வரு­வதாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­முகம் நாடாளுமன்றத்தில் சென்ற மாதம் தெரி­வித்­திருந்தார்.

அச்­சட்­டப்­பி­ரிவு தொடர்­பில் வெவ்­வேறு குழுக்­களு­டன் பேச வேண்டும், பல்­வே­று­பட்ட கண்­ணோட்­டங்­களுக்கு மதிப்­ப­ளிக்க வேண்டும். பின்னர் அவற்­றைக் கவ­ன­மா­கப் பரி­சீ­லிக்க வேண்டும் என்று உள்­துறை அமைச்­சின் வர­வு­செ­ல­வுத் திட்­டம் மீதான விவாதத்தின்போது அமைச்சர் கூறினார்.

இதனையடுத்து இந்தக் கருத்தாய்வில் கலந்துகொள்ள அனைத்து தரப்பினருக்கும் ரிச் அழைப்பு விடுத்திருந்தது.

எல்ஜிபிடி சமூகம் சிங்கப்பூரில் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா, அதற்கு ஆதரவு தரப்படுகிறதா போன்ற கேள்விகள் மக்களிடையே கேட்கப்பட்டன். 377A பிரி­வு குறித்தும் கருத்துகள் சேகரிக்கப்ப்டடன. சேகரிக்கப்பட்ட கருத்துகள் சம்பந்தபட்ட அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும் என ரிச் தெரிவித்தது.