சில பயணிகள் மெய்நிகராக 'ஏஆர்டி' பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்

சில பயணிகள் மெய்நிகராக 'ஏஆர்டி' பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்

1 mins read
5c9033c8-6302-4b8d-a975-4f1539a870ad
-

அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, பெரும்­பா­லான ஐரோப்­பிய நாடு­கள் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரும் சில பய­ணி­கள் புறப்­ப­டு­வதற்கு முன் எடுக்கவேண்டிய 'ஏஆர்டி' பரி­சோ­த­னை­களை மெய்­நி­க­ராக மேற்­கொள்­ள­லாம். இதன்­படி தகு­தி­பெ­றும் பய­ணி­கள் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­ளும்­போது மெய்­நி­க­ரா­கக் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வர்.

இந்த ஏற்­பாடு பய­ணி­க­ளுக்கு வச­தி­யாக அமை­யும், சில வேளை­களில் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வ­தற்­கான செல­வும் குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

எனி­னும், குறு­கிய காலத்­திற்கு சுற்­றுலா மேற்­கொள்­ளும் பய­ணி­கள் இந்த ஏற்­பாட்­டிற்­குத் தகு­தி­பெ­ற­மாட்­டார்­கள்.

சில நாடு­க­ளி­லி­ருந்து வரும் சிங்­கப்­பூர் குடி­மக்­கள், நிரந்­த­ர­வாசி­கள், வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போர் ஆகி­யோர் மெய்­நி­க­ராக கொவிட்-19 பரி­சோதனையை மேற்­கொள்­ள­லாம் என்று இம்­மா­தத் தொடக்­கத்­தில் சுகா­தார அமைச்சு தனது இணை­யத்­த­ளத்­தில் தெரி­வித்­தது. இந்தியா, பிரிட்­டன், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தைச் சேர்ந்த நாடு­கள், பல மத்­திய கிழக்கு நாடு­கள் உள்­ளிட்­ட­வற்­றி­லி­ருந்து வரு­வோ­ருக்கு இது பொருந்­தும்.

இந்த ஏற்­பாட்­டின்­படி சிங்­கப்­பூரில் அல்­லது சம்­பந்­தப்­பட்ட நாடு­களில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட 'ஏஆர்டி' பரி­சோ­த­னைக் கரு­வி­களை மட்டும்­தான் பய­ணி­கள் பயன்­ப­டுத்­த­மு­டி­யும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது. சிங்­கப்­பூ­ருக்­குப் புறப்­ப­டு­வ­தற்கு முன்பு இரண்டு நாள்­க­ளுக்­குள் பரி­சோ­த­னையை மேற்­கொள்­ள­வேண்­டும் என்­றும் அமைச்சு பய­ணி­க­ளுக்கு நினை­வூட்­டி­யது.

இந்த ஏற்­பாட்­டிற்­குத் தகு­தி­பெறும் நாடு­கள் எவ்­வாறு நிர்­ணயிக்­கப்­படும் என்­பதை அறிந்துகொள்ள ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் சுகா­தார அமைச்­சைத் தொடர்­பு­கொண்­டுள்­ளது. சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­பா­ளர்­களை மெய்­நி­க­ரா­கத் தொடர்­பு­கொண்டு 'ஏஆர்டி' பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வ­தற்கு வகை­செய்­யும் திட்­டத்தை கடந்த ஜன­வரி மாதம் அமைச்சு அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.