ரீச்ஆய்வில் 30,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ரீச்ஆய்வில் 30,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

1 mins read
1c9bfc0b-536a-4ed1-b7cb-4af7de5f7e95
-

ஓரி­னப் புணர்ச்­சி­யா­ளர்­, திரு­நங்கை­உள்­ளிட்­டோர் (எல்ஜிபிடி) பிரச்­சினை­கள், தண்டனை விதித்­தொகுப்­பின் 377ஏ பிரிவு ஆகி­யவை தொடர்­பான பொது ஆய்வு புதன்­கி­ழமை முடிந்­தது.

அதில் 30,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் கலந்­து­கொண்டு கருத்து தெரி­வித்­த­னர்.

அர­சாங்­கத்­தின் ரீச் கருத்­த­றியும் பிரிவு, பல ஆய்­வு­களை நடத்தி இருக்­கிறது. அவற்­றில் பொது­மக்கள் கருத்­து­க­ளைத் தெரி­வித்து இருக்­கி­றார்­கள்.

ஆனால் இந்த ஆய்­வில்­தான் இதுவரை இல்­லாத அள­வுக்கு இவ்­வ­ளவு ஆயி­ரம் பேர் கலந்­து­கொண்டு உள்­ள­னர் என்று ரீச் அமைப்பு குறிப்­பிட்­டுள்­ளது.

ஆய்­வில் திரட்­டப்­பட்ட தகவல்கள் ஏற்­புடைய அமைப்­பு­களு­டன் பகிர்ந்துகொள்­ளப்­படும். கொள்­கை­களை மேம்­ப­டுத்­த­வும் மாற்­றங்­க­ளைச் செய்­ய­வும் அர­சாங்­கத்­திற்­குள்­ளாக அந்­தத் தக­வல்­கள் பயன்­ப­டக்­கூ­டும் என்­றும் ரீச் அமைப்பு தெரி­வித்து உள்­ளது.

"சிங்­கப்­பூ­ரில் எல்­ஜி­பிடி சமூ­கம் பற்­றிய உங்­க­ளு­டைய கருத்­து­களைச் செவி­ம­டுக்க விரும்­பு­கிறோம். இந்த ஆய்­வில் யார் வேண்டு­மா­னா­லும் கலந்­து­கொள்­ள­லாம்," என்று முன்­ன­தாக ரீச் அமைப்பு தெரி­வித்து இருந்­தது.

ஆட­வர்­க­ளுக்கு இடை­யில் பாலி­யல் தொடர்­பு­கள் இருந்­தால் அவற்றை குற்­றச் செயல்­க­ளாக வகைப்­ப­டுத்­தும் சட்­டத்தைத் தலை­சி­றந்த முறை­யில் எப்­படி செம்­மை­யா­கத் திருத்தி அமைக்­க­லாம் என்­பது பற்றி அர­சு மிக­வும் கவ­ன­மாக ஆராய்ந்து வரு­கிறது என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் சண்­மு­கம் இம்­மாதத் தொடக்­கத்­தில் தெரி­வித்து இருந்­தார்.

"வெவ்­வேறு வகை­யான கண்­ணோட்­டங்­க­ளுக்கு நாம் மரி­யாதை கொடுக்­க­வேண்­டும். அவற்றைக் கவ­ன­மாக பரி­சீ­லிக்க வேண்­டும். பல­த­ரப்­பட்ட குழுக்­க­ளோ­டும் பேச­வேண்­டும்," என்று நாடா­ளு­மன்றத்­தில் உள்­துறை அமைச்­சின் வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தத்­தின்­போது அமைச்­சர் குறிப்­பிட்டிருந்­தார்.