இரு வார கால சோதனை; 32 பேர் கைது, விசாரணை

இரு வார கால சோதனை; 32 பேர் கைது, விசாரணை

1 mins read
d92bdcdf-f316-4266-91f6-a958642d41f1
-

பொழு­து­போக்கு, இரவு நேர கேளிக்கை விடு­தி­களில் குற்­றச்­செ­யல்­க­ளைத் துடைத்து ஒழிக்­கும் நோக்­கத்­து­டன் அதி­கா­ரி­கள் இரண்டு வார காலம் எடுத்த நட­வடிக்­கை­களை அடுத்து 32 பேர் கைதாகி விசாரிக்கப்படு­கி­றார்­கள்.

அவர்­களில் 26 பேர்­, 16க்கும் 41க்கும் இடைப்­பட்ட வய­துள்ள ஆட­வர்­கள்.

சட்­ட­வி­ரோத கும்­பல்­களில் அவர்­க­ளுக்­குத் தொடர்பு உண்டு என்று கூறப்­ப­டு­கிறது. இதர மூன்று பேரில் ஒரு­வர் ஆட­வர். இரு பெண்­கள். ஆட­வர்­கள் 26 பேரையும் அதி­கா­ரி­கள் கைது செய்­த­போது அந்த ஆடவர் பிரச்­சி­னை­யாக இருந்­தார் எனக் கூறப்பட்டது.

அதி­கா­ரி­கள் பிப்­ர­வரி 25ஆம் தேதி முதல் மார்ச் 11ஆம் தேதி­வரை பல இடங்­க­ளி­லும் சோதனை நடத்­தி­னர். மொத்­தம் 364 பேர் விசா­ரிக்­கப்­பட்­ட­னர். 100 இடங்­கள் சோதிக்­கப்­பட்­டன.

ஆயு­தம் வைத்­தி­ருந்­த­தன் தொடர்­பில் 24 வயது ஆட­வர் ஒரு­வர் கைதா­னார். காவல்­துறை தேடி­வந்த 29, 32 வய­துள்ள இரு ஆட­வர்களும் அந்த நட­வ­டிக்­கை­யின்­போது சிக்­கி­னர். உளவுத் துறையின் குண்டர்கும்பல் ஒழிப்புப் பிரி­வுத் தலை­மை­யில் சோத­னை நடந்­தது.