தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பக்கவாத பெண் நோயாளியை மானபங்கப்படுத்திய துப்புரவு ஊழியர்; அடுத்த மாதம் தண்டனை

2 mins read
7553aa60-3eac-4a7e-a561-919718d48814
-

மருத்­து­வ­ம­னை­யில் முற்­றி­லும் பக்­க­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்ட 42 வயது பெண் நோயாளி ஒரு­வரை துப்­பு­ரவு ஊழி­யர் மான­பங்­கப்­ப­டுத்­தி­னார்.

பக்­க­வாத பாதிப்பு இருந்­தா­லும் சொந்­த­மாக ஓர­ள­வுக்­குச் செயல்­படக்­கூ­டிய நிலை­யில் இருந்த அந்த மாது, அந்த ஆட­வர் தன்னை மான­பங்­கம் செய்­கி­றார் என்­பதை தெரிந்துகொண்­டார். ஆனால் அவரால் பேச இய­லாது.

இத­னால் அவ­ரால் ஒன்­றும் செய்ய முடி­ய­வில்லை. உத­விக்­குக் குரல்­கூட கொடுக்க முடி­ய­வில்லை என்று நீதி­மன்ற விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஒரு தாதி வந்து கையும் களவு­மாக அந்த ஆட­வ­ரைப் பிடித்த பிற­கு­தான் அந்த ஆட­வர் தன் செய்­கையை நிறுத்­தி­னார்.

மான­பங்­கம் செய்­த­தாக அந்த 56 வயது சிங்­கப்­பூ­ரர் ஒப்­புக்­கொண்­டார். தடை உத்­த­ரவு கார­ண­மாக மேல் விவ­ரங்­களை வெளி­யிட இய­லாது. இந்­தச் சம்­பவம் சென்ற ஆண்டு ஏப்­ரல் 27ஆம் தேதி நிகழ்ந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

காவல் துறை­யி­டம் புகார் தெரி­விக்­கப்­பட்­டதை அடுத்து அடுத்த நாளன்று ஆட­வர் கைதா­னார்.

மான­பங்­கம் செய்­த­தாக அதி­கா­ரி­க­ளி­டம் ஒப்­புக்கொண்ட அந்த ஆட­வர், மன நோய்க்குத் தான் மருந்து சாப்­பி­ட­வில்லை என்­றும் அந்த மாதைத் தொடும்­படி தன் காதில் குரல் கேட்­ட­தா­க­வும் அதுவே தான் அப்­படிச் செய்­த­தற்குக் கார­ணம் என்றும் அதி­காரி­ க­ளி­டம் கூறி­னார்.

இத­னி­டையே, தன் கட்­சிக்­காரருக்கு மனக்கோளாறு உண்டு என்­றும் மருந்து உட்­கொள்­ளா­ததே அவர் தவ­றாக நடந்­து­கொண்ட தற்குக் கார­ணம் என்­றும் குற்­ற­வா­ளி­யின் வழக்­க­றி­ஞர் வாதிட்­டார்.

குற்றவாளிக்கு அடுத்த மாதம் தண்­டனை விதிக்­கப்­படும் என்று தெரி­கிறது.