வெளிநாட்டு ஊழியருக்கு விதி தளர்வு: வெளியே சென்றுவர இனி அனுமதி பெற வேண்டாம்

வெளிநாட்டு ஊழியருக்கு விதி தளர்வு: வெளியே சென்றுவர இனி அனுமதி பெற வேண்டாம்

3 mins read
f824fa5a-4046-4240-becf-a416906bfc0a
-

முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட வெளி­நாட்டு ஊழி­யர்­கள், ஏப்­ரல் 1 முதல் பொழு­து­போக்கு இடங்­க­ளுக்­குச் செல்ல அனு­மதி பெற வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

சமூ­கத்­தைச் சேர்ந்த மக்­க­ளுக்­கான ஆகப்புதிய கொவிட்-19 பாது­காப்பு விதி­மு­றை­கள், தங்­கு­வி­டு­தி­களில் வசிக்­கின்ற வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் பொருந்தும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள், வரும் செவ்­வாய்க்­கி­ழமை முதல் (மார்ச் 29) 10 பேர் வரை ஒன்­று­கூட முடி­யும். அவர்கள் வெளியே செல்லும்­போது விரும்­பி­னால் முகக்­க­வ­சத்தை அணிந்துகொள்­ள­லாம்.

கொவிட்-19 கிரு­மி­யு­டன் வாழ்­வ­தைச் சாத்­தி­ய­மாக்­கும் திட்­ட­வட்­ட­மான ஒரு நடை­முறை பற்றி பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று அறி­வித்­தார்.

அதன் ஒரு பகு­தி­யாக விதி­மு­றை­கள் தளர்த்­தப்­ப­டு­கின்­றன. சமூ­கத்­தில் குறிப்­பிட்ட இடங்­க­ளுக்­குச் செல்ல வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அனு­மதி கேட்டு விண்ணப்பிக்க வேண்­டிய ஒரு நடை­முறை நடப்­பில் இருந்து வந்துள்ளது.

அந்த அனு­ம­தி­யைப் பெற்ற பிற­கு­தான் தங்­கள் தங்­கு­வி­டு­தி­யில் இருந்து அவர்கள் வெளியே சென்­று­வர முடி­யும். ஆனால் இந்த தேவை இனி அவர்களுக்கு இராது. என்றாலும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத ஊழி­யர்­கள் மட்­டுமே ஏப்­ரல் முதல் இந்த அனு­மதி­யைப் பெற வேண்டி இருக்­கும்.

அதோடு, ஏஆர்டி பரி­சோ­த­னை­யை­யும் இவர்­கள் செய்­து­கொள்ள வேண்­டும் என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத ஊழி­யர்­க­ளுக்குச் சமூ­கத்­தில் கலந்­து­ற­வாட அனு­மதி இருக்­காது.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வார நாள்­க­ளி­லும் வார முடிவு, பொது விடுமுறை நாள்­க­ளி­லும் வெளியே சென்று வரு­வதற்­கான வரம்பு அளவு சென்ற வாரம் அதி­கரிக்­கப்­பட்­டது. ஏற்­கெ­னவே வார நாள்­களில் 3,000 பேரும் வார முடிவு, பொது விடு­முறை நாள்­களில் 6,000 பேரும் வெளியே செல்ல அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

இந்த வரம்பு முறையே 15,000 ஆக­வும் 30,000 ஆக­வும் அதி­க­ரிக்­கப்­பட்­டது. இந்த வரம்­பில் மாற்­றம் இருக்­காது என்­றும் அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது. இருந்தாலும் இனி­மேல் ஊழி­யர்­கள் ஏஆர்டி பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டாம்.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் வசிப்­போ­ரில் 98 விழுக்­காட்­டிற்­கும் மேற்­பட்­ட­வர்­கள் முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.

பூஸ்­டர் ஊசியைப் போட்­டுக்­கொள்­ளும் அத்­த­கைய ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் மிக அதி­க­மாக இருக்­கிறது என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்து இருக்­கி­றார்­கள்.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் கடந்த டிசம்­பர் முதலே அன்­றாட கொவிட்-19 தொற்று எண்­ணிக்கை 100க்கும் குறை­வா­கவே இருந்து வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் கொரோனா கிருமி தலை­காட்­டிய முதல் ஆண்­டில் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­க­ளில்­தான் படு­மோ­சமான பாதிப்­பு­கள் இருந்­தன.

2020 ஏப்­ர­லில் அத்­த­கைய விடு­தி­களில் தங்­கி­யி­ருந்த ஊழி­யர்­களில் 31 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்றி இருந்­தது. இந்த எண்­ணிக்கை அதே ஆண்டு ஜூன் மாதத்­தில் 33,000 ஆகக் கூடி­விட்­டது.

அந்த ஆண்­டில் கிருமி தொற்­றிய 20 பேரில் 19 பேர் வெளி­நாட்டு ஊழி­யர்­களாக இருந்­த­னர். 2021 ஆண்டு முடி­வில் 323,000 தங்­கு­வி­டுதி ஊழி­யர்­களில் 175,000க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்­குத் தொற்று இருந்­தது.

ஆனால் பிறகு இந்த நிலைமை படிப்படி யாக சீரடைந்து தொற்று குறைந்துவிட்டது.