வழக்கமான பணிகள் தொடர மருத்துவமனைகள் முயற்சி

வழக்கமான பணிகள் தொடர மருத்துவமனைகள் முயற்சி

2 mins read
39befaae-7d87-4cdd-b272-b34fce6facfe
-

அமைச்சர்: அவசர சிகிச்சை நாடுவோரில் அதிகம் பேர் கொவிட்-19 சாரா நோயாளிகள்

சிங்­கப்­பூ­ரில் ஓமிக்­ரான் தொற்று ஒடுங்­கு­கிறது. இந்த நிலை­யில் தொற்றுக் காலத்­தில் தாங்­கள் பட்ட கடனை மருத்­து­வ­ம­னை­கள் திருப்பி அடைக்க வேண்­டிய தேவை இருக்­கிறது என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று தெரி­வித்­தார்.

மருத்­துவக் கவ­னிப்பு தேவை இருக்­கின்ற அதிக எண்­ணிக்கை யிலான முற்­றிய நோயா­ளி­கள் மீது இப்­போது மருத்­து­வ­ம­னை­கள் தங்கள் கவ­னத்தைத் திருப்­பு­கின்றன.

மருத்­து­வ­ம­னை­களில் அவ­சர சிகிச்சை நாடும் நோயா­ளி­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் இப்­போது கொவிட்-19 அல்­லாத இதர நோயாளி­க­ளாக இருக்­கி­றார்­கள் என்­பதை அமைச்­சர் சுட்­டி­னார்.

திரு ஓங், அமைச்­சு­கள்­நிலை கொவிட்-19 பணிக்­குழு செய்­தி­யா­ளர்­கள் கூட்­டத்­தில் நேற்று பேசி­னார். கடந்த இரண்­டாண்டு காலத்­தில் மருத்­து­வ­ம­னை­கள் கொவிட்-19 நோயா­ளி­க­ளைக் குணப்­ப­டுத்த வேண்­டியநிலை இருந்­தது.

இத­னால் முற்­றிய நோயா­ளி­கள் பல­ரை­யும் கவ­னிக்க இய­லாத சூழ்­நிலை மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கக்கூடும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

இப்­போது இத்­தகைய நோயாளி கள் ­மீது கவனத்தைச் செலுத்தி மருத்­து­வ­ம­னை­கள் வழக்­க­மா­கச் செயல்­பட வேண்­டியநிலை இருக்­கிறது. இத்­த­கைய நோயா­ளி­களைக் கவ­னிக்க வேண்­டிய பொறுப்பை மருத்­து­வ­ம­னை­கள் அடைக்க வேண்­டிய ஒரு கடன் என்று குறிப்­பிட்ட அமைச்­சர், ஏதா­வது ஒரு வழி­யில் இதைத் திருப்பி அடைக்க வேண்டி இருக்­கிறது என்­றார்.

இந்­தக் கடன் கொவிட்-19 சாராத தனிப்­பட்ட சுகா­தா­ரப் பரா­மரிப்­புச் சுமை­யாக ஆகியிருக்­கிறது.

கொவிட்-19 தொற்று எண்­ணிக்கை ஏறி­னா­லும் இறங்­கி­னா­லும் அவ­சர சிகிச்சைப் பிரி­வு­களில் பணி மீதான அதன் தாக்­கம் மிக ஏற்­ற­மாக இருக்­காது.

இருந்­தா­லும்­கூட நீண்­ட­கா­லப் போக்­கில் அமைப்பு ரீதி­யான செயல்­கள் தேவைப்­ப­டு­கின்­றன.

இந்­தப் பிரச்­சி­னையைச் சமாளிக்க அமைச்சு நான்கு செயல் க­ளைச் செய்து வரு­கிறது என்று திரு ஓங் கூறி­னார்.

முத­லா­வ­தாக, மருத்­து­வ­ம­னை­களில் வழக்­க­மான நோயா­ளி­க­ளுக்­குச் சேவை­யாற்றுவதில் தன்­னு­டைய ஒரு­மித்த கவ­னத்தைப் படிப்­ப­டி­யாக அது திருப்­பு­கிறது.

இரண்­டா­வ­தாக, நீண்­ட­கா­லப் போக்­கில் சிகிச்சை பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளின் கொள்­ள­ளவை விரி­வு­படுத்­து­வது; சுகா­தார அமைச்சு கொவிட்-19 சிகிச்சை வச­தி­களை முற்­றி­லும் பயன்­ப­டுத்­திக்கொள்ளும் அணு­கு­முறை மூன்­றா­வது முயற்­சி­யாக இருக்­கும்.

நான்­கா­வ­தாக, தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளு­டன் தன்­னு­டைய இப்­போ­தைய ஒருங்­கி­ணைந்த செயல்­பா­டு­க­ளைச் சுகாதார அமைச்சு தொட­ரும் என்று திரு ஓங் குறிப்­பிட்­டார்.