தடுப்பூசிப் போட்ட பயணிகள் எல்லாரும் ஏப்ரல் 1 முதல் வரலாம்

தடுப்பூசிப் போட்ட பயணிகள் எல்லாரும் ஏப்ரல் 1 முதல் வரலாம்

2 mins read
940a779f-9de4-40e6-b0b0-815bef1118a7
-

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசியை முழு­மை­யாகப் போட்­டுக்­கொண்ட எல்­லா­ரும் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்ற வேண்­டிய தேவை இல்­லா­மல் சிங்­கப்­பூ­ருக்கு ஏப்­ரல் 1 முதல் வர முடி­யும்.

அவர்­கள் 'விடி­எல்' எனப்­படும் தடுப்­பூசி போட்­­டோ­ருக்­கான விமானப் பய­ணப்­பாதைத் திட்ட விமா­னங்­க­ளில்­தான் வர­வேண்­டும் என்ற தேவை­யும் இருக்­காது.

சிங்­கப்­பூர் புறப்­ப­டு­வ­தற்கு முன் அவர்­கள் கொவிட்-19க்கு எதி­ரான ஒரு பரி­சோ­த­னையைச் செய்து கொண்­டாலே போது­மா­னது என்று அறி­விக்­கப்­பட்டு இருக்­கிறது. அத்­த­கைய பய­ணி­களில் 12 வய­தும் அதற்கு குறை­வான வய­தும் உள்ள சிறார்­களும் அடங்­கு­வர்.

சிங்­கப்­பூர் தன்­னு­டைய எல்­லை­களைத் திறந்­து­வி­டு­கிறது. இதனை­ அடுத்து இங்கு தரை­யி­றங்­கி­ய­தும் 24 மணி நேரத்­துக்­குள் ஏஆர்டி பரி­சோ­த­னையைச் செய்துகொள்ள வேண்­டிய தேவை­யும் பய­ணி­களுக்கு இனி இராது. அன்­றா­டம் இவ்­வ­ளவு பய­ணி­கள்­தான் வர­முடி­யும் என்ற வரம்­பும் அகற்­றப்­படும்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள் அனை­வ­ரும் நுழைவு அங்­கீ­கா­ரத்­தைப் பெற வேண்­டும் என்ற தேவை­யும் அகற்­றப்­படும்.

இத்­த­கைய புதிய கொள்­கை­கள் கார­ண­மாக தொற்­றுக்கு முன்பு இருந்த நிலை கிட்­டத்­தட்ட திரும்பி­வி­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இப்­போது நடப்­பில் இருக்­கும் விடி­எல் திட்­டத்­திற்­குப் பதி­லாக 'தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பயண ஏற்­பாடு' என்ற புதிய திட்­டம் நடப்­புக்கு வரு­கிறது.

இருந்­தா­லும் சிங்­கப்­பூர் புறப்­படு­வ­தற்கு முன் குறைந்­த­பட்­சம் இரண்டு நாட்­க­ளுக்­குள் கொவிட்-19 பரி­சோ­த­னையைச் செய்­து­கொள்ள வேண்­டும் என்ற தேவை தொடர்ந்து இருந்து வரும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

13 வய­தும் அதற்கு அதிக வயதும் உள்ள, முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத நீண்­ட­கால அனு­ம­தி­தா­ரர்­கள், குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வர பொது­வாக அனு­மதிக்­கப்­ப­டுவதில்லை.

இருந்­தா­லும் மருத்­துவ நில­வரங்­கள், செல்­லு­ப­டி­யா­கக்­கூ­டிய நுழைவு அங்­கீ­கா­ரங்­கள் ஆகி­ய­வற்­றைப் பொறுத்து விதி­வி­லக்­கு­கள் கொடுக்­கப்­படும்.

இவர்­கள் சிங்­கப்­பூர் புறப்­ப­டு­வதற்கு முன் இரண்டு நாள்­க­ளுக்­குள் கொவிட்-19 பரி­சோ­தனை செய்து கொண்­டி­ருக்­க­வேண்­டும். இங்கு வந்­த­தும் ஏழு நாள்­கள் தனி­மை­யில் இருக்­க­வேண்­டும்.

தனி­மைக்­கா­லம் முடி­யும்­போது பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும்.